எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார். மேலும், 1,400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு தமிழ்நாடு முதல்வரால் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மையத்திற்கான கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டிடமாக உருவாக்கப்படும். இக்கட்டிடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும். சுற்றுப்புற காற்றின் தரத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்தல், தொழிற்சாலை உமிழும் கழிவு வாயு, கழிவுநீர் கண்காணிப்பு, உயிரி மருத்துவ கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் எடுத்துச் செல்லப்படுவதை கண்காணித்தல், ஆகியவற்றுடன் ஓர் மேம்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ஆகியவை இம்மையத்தில் நிறுவப்படும்.
தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை தமிழ்நாடு முதல்வர் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் கடலோரங்களில், கடலில் கைவிடப்படும் மீன்வலைகள் மற்றும் நெகிழி கழிவுகள், கடல் உயிர்வளம் மற்றும் கடல்சார் சூழலுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்நிலையில், கடல்சார் நெகிழி மாசுபாட்டை எதிர்கொள்ளும் முயற்சியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக, "தமிழ்நாடு மீன்வலை முயற்சிகள்" என்ற திட்டத்தின் கீழ், 2024 ஆகஸ்ட் 14-ம் தேதி காசிமேட்டில் "கைவிடப்பட்ட மீன்பிடி வலை சேகரிப்பு மையத்தினை" முதல்வர் தொடங்கி வைத்தார்.
கடலில் கைவிடப்படும் மீன்வலைகளை சேகரித்து, மீனவர்களின் பங்கேற்புடன் அவற்றை மறுசுழற்சி செய்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், மீனவர்கள் சேகரிக்கும் ஒவ்வொரு கிலோ கைவிடப்பட்ட மீன்வலைக்கும், அவர்களுக்கு ரூ.40 முதல் ரூ.46 வரை வழங்கப்படுகிறது. இதில், ரூ.4 முதல் ரூ.6 வரை ஊக்கத்தொகையும் அடங்கும். இதன்மூலம், மீனவர்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இதுவரை, 17,044 கிலோவுக்கும் அதிகமான கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், கடலுக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. 10,700 கிலோ கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன.
சென்னை, காசிமேட்டில் தொடங்கிய இம்முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில், உலக வங்கியின் தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டம் மூலமாக, 1.75 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கடலோர மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். இது நம் கடல்களின் பாதுகாப்பையும், மீனவர்களின் நலனையும் ஒருசேர முன்னேற்றும் ஒரு மாபெரும் திட்டமாகும்.
இவ்விழாவில், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் பற்றிய குறும்படத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். தனுஷ்கோடி பெரும் பூநாரைகள் சரணாலயம், பல்லுயிர் வளம் மிகக் கொண்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் 524.78 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் தீவின் கடைகோடியில் உள்ள சதுப்பு நிலங்களில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பெரும் பூநாரைகள் உள்ளிட்ட வலசை பறவைகள் இடம் பெயர்வதற்கான மத்திய ஆசிய பறவைப் பாதையின் முக்கியப் பகுதியாகும்.
இந்த சரணாலயம் புலம் பெயர்ந்த ஈர நில பறவைகளுக்கான வலசைப் பாதையிலும் அமைந்துள்ளது. இங்கு நிலப்பரப்பினைச் சார்ந்த 55 வகையான பறவை இனங்களும், நிலப்பரப்பினைச் சாராத புலம் பெயர்ந்த 73 பறவை இனங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை 700 பூநாரைகள் மற்றும் 4,300 அலைந்து திரியும் பறவை இனங்கள் இங்கு வருகை புரிகின்றன. இந்த சரணாலயம் அமைக்கப்படுவதன் மூலம் இந்த உயிர்க்கோளக் காப்பகத்தின் பல்லுயிர் சமநிலை பாதுகாக்கப்படுவதுடன், இங்கு வருகைபுரியும் பறவை இனங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கை செய்யப்படும் மூன்றாவது பறவைகள் சரணாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 18 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. வனங்களை காத்து வளர்த்திட வனத்துறைக்கு போதுமான பணியாளர்கள் தேவை. அதனை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வனக் காவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 1,400 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்மூலம் வனத்துறையின் செயல்பாடுகள் மேலும் செம்மையுறும்.
மேலும், மனித வனவிலங்குகள் முரண்பாடு மேலாண்மை, பசுமை தமிழ்நாடு இயக்கம், நீடித்த நிலைத்த வன மேலாண்மை ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட விழுப்புரம், கரூர், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் ஆகிய 5 மாவட்ட வன அலுவலர்களுக்கு சிறந்த மாவட்ட வனப் பாதுகாவலர் விருதுகள்; தூத்துக்குடி, முத்துப்பேட்டை, மொரப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் போளுவாம்பட்டி ஆகிய சரகங்களைச் சார்ந்த ஐந்து வனச் சரகர்களுக்கு சிறந்த வனச்சரகர்களுக்கான விருதுகள் முதல்வரால் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட 38 நபர்களுக்கு முதல்வரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருதுகள் மற்றும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகை மற்றும் 5 தொழிற்சாலைகளுக்கு தன்னார்வ பசுமைத் தரவரிசைக்கான விருதுகள் ஆகிய விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி வாழ்த்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் நிலவில் வெற்றிகர தரையிறக்கம்
05 Jun 2025டோக்கியோ: நிலவின் வடக்கு பகுதியில் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் தரையிறங்கியது.
-
பெங்களூர் துயர சம்பவம் குறித்து தாமாக முன்வந்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விசாரணை
05 Jun 2025பெங்களூர்: கர்நாடாகவில் ஐ.பி.எல்.
-
நார்வே செஸ் தொடர்: உலக சாம்பியனை வீழ்த்திய வைஷாலி
05 Jun 2025ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
-
எச்சரிக்கை விடுத்த போலீஸ்; மறுத்து அடம் பிடித்த ஆர்.சி.பி. 11 பேர் பலி சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்
05 Jun 2025பெங்களூரு: போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் ஆர்.சி.பி. நிர்வாகம் அடம் பிடித்ததே 11 பேர் பலியானதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை
05 Jun 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்.
-
இங்கிலாந்து அணியில் ஓக்ஸ்
05 Jun 2025இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
-
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கார் வீட்டுக்குள் புகுந்ததில் 6 பேர் பலி
05 Jun 2025நாசிக்: சாலையோரம் உள்ள வீட்டுக்குள் கார் புகுந்ததையோட்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பக்ரீத் பண்டிகை: தமிழக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக இ.பி.எஸ்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2025.
06 Jun 2025 -
பெங்களூரு கூட்ட நெரிசல்: சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்துவிட்டேன்: கோலி
05 Jun 2025பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்.சி.பி. வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
05 Jun 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
பெங்களூரு நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவிப்பு
05 Jun 2025பெங்களூரு: பெங்களூரு நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
11 பேர் உயிரிழப்பு...
-
இன்று பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸடாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
06 Jun 2025சென்னை, மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
-
மாநிலங்களவைத் தேர்தல்: இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
06 Jun 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
குரூப் 1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
06 Jun 2025சென்னை, ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
கொரோனா பரவல் எதிரொலி: தமிழ்நாட்டில் கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
06 Jun 2025சென்னை, கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
நீதிபதி உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
06 Jun 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ள
-
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம்: ஆர்.சி.பி. அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
06 Jun 2025பெங்களூரு, ஆர்.சி.பி. அணியின் ஐ.பி.எல்.
-
ஓய்வு பெற்ற நீதிபதி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
06 Jun 2025சென்னை : ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்க டசால்ட்டுடன் டாடா ஒப்பந்தம்
06 Jun 2025புதுடெல்லி : ரபேல் விமானத்தின் கூண்டு பகுதியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக டசால்ட்டுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
அதிபர் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே திடீரென மோதல்: நன்றியுணர்வு அற்றவர் என காட்டம்
06 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கும் எலான் மஸ்கிற்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது.
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு: வீடு, வாகனங்களுக்கான வட்டி குறையும்
06 Jun 2025புதுடெல்லி, வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ரயிலில் அடிப்பட்டு பெண் பலி
06 Jun 2025அமெரிக்கா : அமெரிக்காவில் நாயை காப்பாற்ற முயன்ற பெண் ரயில் அடிப்பட்டு உயிரிழந்தார்.
-
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
06 Jun 2025திருச்சி : தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.