எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் வரும் ஜூன்.20ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. வேகப் பந்து வீச்சாளரான கிறிஸ் ஓக்ஸ் (36) 57 டெஸ்ட் போட்டிகளில் 181 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பௌலிங் ஆல்ரவுண்டரான இவர் 1,970 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 2018 தொடரில் இங்கிலாந்து வெற்றியடைய முக்கியமான காரணமாக கிறிஸ் ஓக்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கிறிஸ் ஓக்ஸ் 137 ரன்கள், 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன்மூலம் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.
பேட்மிண்டன்: பி.வி. சிந்து தோல்வி
இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் 8-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை போர்ன்பாவீ சோச்சுவோங்குடன் மோதினார்.
1 மணி 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் சோச்சுவோங்கிடம் தோல்வியடைந்தார். தோல்வி குறித்து பேசிய பி.வி. சிந்து, "மூன்றாவது செட்டில் நான் 16-13 என முன்னிலையில் இருந்தேன். அதை நான் வெற்றியாக மாற்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒட்டுமொத்தமாக எனது ஆட்டத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த போட்டியிலிருந்தும் இந்த தொடரிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று கூறினார்.
இலங்கை வீரர் மீது குற்றப்பத்திரிகை
இலங்கை அணிக்காக 1 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். பந்துவீச்சில் 78 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு முதன்முதலாக தொடங்கிய லங்கா பிரீமியர் லீக்கில் (எல்.பி.எல்.) தொடங்கியது. அப்போது, கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிய இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபட அணுகியுள்ளார். 40 வயதான சேனநாயக் துபாயில் இருந்து தொலைபேசி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கையின் செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியது. இதற்காக கைது செய்யப்பட்ட சேனநாயக் கடந்த 2023-இல் பிணையில் வெளி வந்தார்.
இந்நிலையில், இலங்கையின் அம்பாந்தோட்ட உயர் நீதிமன்றம் சூதாட்டத்தை உறுதிசெய்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புக்குப் பிறகு இதுதான் தேசிய அளவில் முதல் சூதாட்டமாக இருக்கிறது. சேனநாயக் மற்றுமொரு இலங்கை வீரர் தரிந்து ரத்னநாயகேவையும் சூதாட்டத்தில் ஈடுபடவைக்க அணுகியுள்ளார்.
தீவிர பயிற்சியில் ஆஸி. வீரர்கள்
டபிள்யூ.டி.சி இறுதிப் போட்டி ஜூன். 11-15ஆம் தேதிகளில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் திடலில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸி.- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் (2023) ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்கும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஐ.பி.எல். போட்டிகள் ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டதால் தங்களது சொந்த நாட்டுக்குச் சென்ற ஆஸி. வீரர்கள் டபிள்யூ.டி.சி.க்கான பயிற்சிக்கு செல்லாமல் இந்தியாவுக்கு விளையாட வந்தார்கள். ஸ்டார்க், மார்கோ யான்சென் போன்ற வீரர்கள் ஐ.பி.எல். கடைசி கட்டத்தில் விளையாடாமல் சென்றார்கள். ஹேசில்வுட், கம்மின்ஸ், இங்கிலிஷ் ஆகியோர் தங்களது கடைசி போட்டி வரை விளையாடினார்கள். இந்நிலையில், அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்குச் சென்று அணியாக இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.
இதயம் உடைந்துவிட்டது: ஸ்மிருதி
பெங்களூரில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்.சி.பி. ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள். ஆர்.சி.பி. நிர்வாகம், விராட் கோலி, ஏபிடி தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஸ்மிருதி மந்தனா கூறியதாவது: பெங்களூரில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களும் எனது அஞ்சலிகள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ஆர்.சி.பி. அணிக்கு முதல் கோப்பையை வென்றுகொடுத்தது ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜெர்மனியை வீழ்த்திய போர்ச்சுகல்
ஜெர்மனியில் நடைபெற்ற நேஷனல் லீக் அரையிறுதியில் போர்ச்சுகல் அணியும் ஜெர்மனியும் மோதின. இந்தப் போட்டியில் 2-1 என போர்ச்சுகல் அணி வென்றது. இதில், முதல் பாதியில் இரு அணிகளுமே கோல்கள் அடிக்காத நிலையில் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே (48’) ஜெர்மனி கோல் அடித்தது. அடுத்ததாக போர்ச்சுகல் 63, 68ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து முன்னிலை வகித்தது.
இதில் ரொனால்டோ 68ஆவது நிமிஷத்தில் நூனோ மென்டிஸ் செய்த அசிஸ்டில் கோல் அடித்து அசத்தினார். கடைசியாக 2000ஆம் ஆண்டு ஜெர்மனியை வீழ்த்தியிருந்த போர்ச்சுகல் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று வரலாற்றை மாற்றியமைத்துள்ளது. கடைசி 5 போட்டிகளிலும் ரொனால்டோ ஜெர்மனியுடன் கோல் அடிக்காத நிலையில் அதையும் இந்தப் போட்டியில் முறியடித்தார். இதன் மூலம், ரொனால்டோ தனது 137-ஆவது சர்வதேச கோலை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜாகீர் கான் திடீர் நீக்கம்..?
18-வது ஐ.பி.எல். சீசன் முடிவடைந்த 2 நாட்களுக்குள் அடுத்த சீசனுக்கான சலசலப்புகள் தற்போதே தொடங்கிவிட்டன. அடுத்த சீசனுக்கு முன்னதாக பல அணிகள் தங்கள் பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களில் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். ஏனெனில் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) ஏலத்தில் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 7-வது இடம் பிடித்து வெளியேறியது. இதனால் அந்த அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தோல்வியின் எதிரொலியாக லக்னோ அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து இந்திய முன்னாள் வீரரான ஜாகீர் கான் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது செயல்பாடுகள் மீது லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீப் கோயங்கா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாகீர் கான் இந்த ஆண்டுதான் லக்னோ அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
நார்வே செஸ் தொடர்: உலக சாம்பியனை வீழ்த்திய வைஷாலி
05 Jun 2025ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
-
எச்சரிக்கை விடுத்த போலீஸ்; மறுத்து அடம் பிடித்த ஆர்.சி.பி. 11 பேர் பலி சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்
05 Jun 2025பெங்களூரு: போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் ஆர்.சி.பி. நிர்வாகம் அடம் பிடித்ததே 11 பேர் பலியானதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
இங்கிலாந்து அணியில் ஓக்ஸ்
05 Jun 2025இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
-
பக்ரீத் பண்டிகை: தமிழக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக இ.பி.எஸ்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2025.
06 Jun 2025 -
பெங்களூரு கூட்ட நெரிசல்: சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்துவிட்டேன்: கோலி
05 Jun 2025பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்.சி.பி. வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
05 Jun 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
பெங்களூரு நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவிப்பு
05 Jun 2025பெங்களூரு: பெங்களூரு நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
11 பேர் உயிரிழப்பு...
-
இன்று பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸடாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாநிலங்களவைத் தேர்தல்: இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
06 Jun 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
06 Jun 2025சென்னை, மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
-
குரூப் 1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
06 Jun 2025சென்னை, ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
நீதிபதி உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
06 Jun 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ள
-
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம்: ஆர்.சி.பி. அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
06 Jun 2025பெங்களூரு, ஆர்.சி.பி. அணியின் ஐ.பி.எல்.
-
கொரோனா பரவல் எதிரொலி: தமிழ்நாட்டில் கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
06 Jun 2025சென்னை, கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
ஓய்வு பெற்ற நீதிபதி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
06 Jun 2025சென்னை : ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்க டசால்ட்டுடன் டாடா ஒப்பந்தம்
06 Jun 2025புதுடெல்லி : ரபேல் விமானத்தின் கூண்டு பகுதியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக டசால்ட்டுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
அதிபர் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே திடீரென மோதல்: நன்றியுணர்வு அற்றவர் என காட்டம்
06 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கும் எலான் மஸ்கிற்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது.
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு: வீடு, வாகனங்களுக்கான வட்டி குறையும்
06 Jun 2025புதுடெல்லி, வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ரயிலில் அடிப்பட்டு பெண் பலி
06 Jun 2025அமெரிக்கா : அமெரிக்காவில் நாயை காப்பாற்ற முயன்ற பெண் ரயில் அடிப்பட்டு உயிரிழந்தார்.
-
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
06 Jun 2025திருச்சி : தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
பணமோசடி வழக்கில் கைதான அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
06 Jun 2025சென்னை, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அ.தி.மு.க. ஐ.டி.
-
டெல்லியில் சட்ட விரோத குடியேற்றம்: 71 வெளிநாட்டினர் நாடு கடத்தல்
06 Jun 2025புதுடெல்லி : டெல்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வந்த வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
-
நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி: ஐகோர்ட்
06 Jun 2025சென்னை, நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
கூட்ட நெரிசல் சம்பவத்தை பா.ஜ.க. அரசியலாக்கியது: சித்தராமையா
06 Jun 2025பெங்களூரு, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா