முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அணியில் ஓக்ஸ்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      விளையாட்டு
ingland-ocs

Source: provided

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் வரும் ஜூன்.20ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. வேகப் பந்து வீச்சாளரான கிறிஸ் ஓக்ஸ் (36) 57 டெஸ்ட் போட்டிகளில் 181 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பௌலிங் ஆல்ரவுண்டரான இவர் 1,970 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்தியாவுக்கு எதிராக 2018 தொடரில் இங்கிலாந்து வெற்றியடைய முக்கியமான காரணமாக கிறிஸ் ஓக்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கிறிஸ் ஓக்ஸ் 137 ரன்கள், 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன்மூலம் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.  முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.

பேட்மிண்டன்: பி.வி. சிந்து தோல்வி

இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் 8-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை போர்ன்பாவீ சோச்சுவோங்குடன் மோதினார்.

1 மணி 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் சோச்சுவோங்கிடம் தோல்வியடைந்தார். தோல்வி குறித்து பேசிய பி.வி. சிந்து, "மூன்றாவது செட்டில் நான் 16-13 என முன்னிலையில் இருந்தேன். அதை நான் வெற்றியாக மாற்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒட்டுமொத்தமாக எனது ஆட்டத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த போட்டியிலிருந்தும் இந்த தொடரிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று கூறினார்.

இலங்கை வீரர் மீது குற்றப்பத்திரிகை 

இலங்கை அணிக்காக 1 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். பந்துவீச்சில் 78 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு முதன்முதலாக தொடங்கிய லங்கா பிரீமியர் லீக்கில் (எல்.பி.எல்.) தொடங்கியது. அப்போது, கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிய இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபட அணுகியுள்ளார். 40 வயதான சேனநாயக் துபாயில் இருந்து தொலைபேசி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கையின் செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியது. இதற்காக கைது செய்யப்பட்ட சேனநாயக் கடந்த 2023-இல் பிணையில் வெளி வந்தார்.

இந்நிலையில், இலங்கையின் அம்பாந்தோட்ட உயர் நீதிமன்றம் சூதாட்டத்தை உறுதிசெய்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புக்குப் பிறகு இதுதான் தேசிய அளவில் முதல் சூதாட்டமாக இருக்கிறது. சேனநாயக் மற்றுமொரு இலங்கை வீரர் தரிந்து ரத்னநாயகேவையும் சூதாட்டத்தில் ஈடுபடவைக்க அணுகியுள்ளார். 

தீவிர பயிற்சியில் ஆஸி. வீரர்கள்

டபிள்யூ.டி.சி இறுதிப் போட்டி ஜூன். 11-15ஆம் தேதிகளில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் திடலில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸி.- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் (2023) ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்கும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐ.பி.எல். போட்டிகள் ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டதால் தங்களது சொந்த நாட்டுக்குச் சென்ற ஆஸி. வீரர்கள் டபிள்யூ.டி.சி.க்கான பயிற்சிக்கு செல்லாமல் இந்தியாவுக்கு விளையாட வந்தார்கள். ஸ்டார்க், மார்கோ யான்சென் போன்ற வீரர்கள் ஐ.பி.எல். கடைசி கட்டத்தில் விளையாடாமல் சென்றார்கள். ஹேசில்வுட், கம்மின்ஸ், இங்கிலிஷ் ஆகியோர் தங்களது கடைசி போட்டி வரை விளையாடினார்கள். இந்நிலையில், அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்குச் சென்று அணியாக இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

இதயம் உடைந்துவிட்டது: ஸ்மிருதி 

பெங்களூரில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்.சி.பி. ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள். ஆர்.சி.பி. நிர்வாகம், விராட் கோலி, ஏபிடி தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா கூறியதாவது: பெங்களூரில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களும் எனது அஞ்சலிகள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ஆர்.சி.பி. அணிக்கு முதல் கோப்பையை வென்றுகொடுத்தது ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஜெர்மனியை வீழ்த்திய போர்ச்சுகல்

ஜெர்மனியில் நடைபெற்ற நேஷனல் லீக் அரையிறுதியில் போர்ச்சுகல் அணியும் ஜெர்மனியும் மோதின. இந்தப் போட்டியில் 2-1 என போர்ச்சுகல் அணி வென்றது. இதில், முதல் பாதியில் இரு அணிகளுமே கோல்கள் அடிக்காத நிலையில் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே (48’) ஜெர்மனி கோல் அடித்தது. அடுத்ததாக போர்ச்சுகல் 63, 68ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து முன்னிலை வகித்தது.

இதில் ரொனால்டோ 68ஆவது நிமிஷத்தில் நூனோ மென்டிஸ் செய்த அசிஸ்டில் கோல் அடித்து அசத்தினார். கடைசியாக 2000ஆம் ஆண்டு ஜெர்மனியை வீழ்த்தியிருந்த போர்ச்சுகல் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று வரலாற்றை மாற்றியமைத்துள்ளது. கடைசி 5 போட்டிகளிலும் ரொனால்டோ ஜெர்மனியுடன் கோல் அடிக்காத நிலையில் அதையும் இந்தப் போட்டியில் முறியடித்தார். இதன் மூலம், ரொனால்டோ தனது 137-ஆவது சர்வதேச கோலை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜாகீர் கான் திடீர் நீக்கம்..?

18-வது ஐ.பி.எல்.  சீசன் முடிவடைந்த 2 நாட்களுக்குள் அடுத்த சீசனுக்கான சலசலப்புகள் தற்போதே தொடங்கிவிட்டன. அடுத்த சீசனுக்கு முன்னதாக பல அணிகள் தங்கள் பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களில் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். ஏனெனில் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) ஏலத்தில் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 7-வது இடம் பிடித்து வெளியேறியது. இதனால் அந்த அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தோல்வியின் எதிரொலியாக லக்னோ அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து இந்திய முன்னாள் வீரரான ஜாகீர் கான் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது செயல்பாடுகள் மீது லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீப் கோயங்கா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாகீர் கான் இந்த ஆண்டுதான் லக்னோ அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து