முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்சரிக்கை விடுத்த போலீஸ்; மறுத்து அடம் பிடித்த ஆர்.சி.பி. 11 பேர் பலி சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

பெங்களூரு: போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் ஆர்.சி.பி. நிர்வாகம் அடம் பிடித்ததே 11 பேர் பலியானதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். கோப்பை...

18-வது ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். 

2 பாராட்டு விழா...

இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

11 பேர் பலி...

இதையொட்டி சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி வெற்றிக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

அடம்பிடித்த ஆர்.சி.பி...

இந்நிலையில் காவல்துறை எச்சரிக்கை செய்தும் ஆர்.சி.பி. அணி அடம் பிடித்த இந்த நிகழ்ச்சியை வைத்தது காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெங்களூரு காவல்துறையினர் தரப்பில் இருந்து ஆர்.சி.பி. அணி நிர்வாகத்திற்கு கூறியதாவது, இந்த விழாவை இன்று (நேற்று முன்தினம்) நடத்த வேண்டாம். ஞாயிற்று கிழமையில் நடத்துமாறும், கூட்ட நெரிசலை சமாளிக்கா முடியாது எனவும் தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டு வீரர்கள்... 

அதற்கு பதிலளித்த ஆர்.சி.பி., வெளிநாட்டு வீரர்கள் பலர் இருப்பதால் இன்றே வைத்தால் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள் என அடம் பிடித்து இந்த நிகழ்ச்சியை நடத்துமாறு தெரிவித்துள்ளனர் என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தான் நேற்று முன்தினம் அந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஆர்.சி.பி. அணியின் இந்த முடிவால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து