முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். வெற்றிக் கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பெண் பலி

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

உடுமலை: பெங்களூருவில் ஐ.பி.எல். சாம்பியன்ஷிப் ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலையைச் சேர்ந்த பள்ளி தாளாளரின் மகள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் நேற்று சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

உடுமலை விஜி ராவ் நகரை சேர்ந்தவர் எஸ்.மூர்த்தி. இவரது மனைவி எஸ்.ராஜலட்சுமி. இவர் உடுமலை மைவாடி பிரிவில் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் உடுமலை தமிழிசை சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது ஒரே மகள் காமாட்சி (27). பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் ஐ.பி.எல். சாம்பியன்ஷிப் ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. அதனை காண்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெங்களூரு விரைந்தனர். நேற்று பகல் 2 மணியளவில் அவரது உடல் உடுமலைக்கு எடுத்து வரப்பட்டது. பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து