எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் , விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற விதமாக, நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் . மேலும் போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
___________________________________________________________________________________________________
சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா உள்பட 70 வீராங்கனைகள் பங்கேற்றனர். தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து 8 வீராங்கனைகளில் ஒருவராக இறுதி சுற்றுக்குள் நுழைந்த சம்ரா இறுதிப்போட்டியில் 453.1 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். இந்த பந்தயத்தில் உலக சாதனையாளராக விளங்கும் பஞ்சாப்பை சேர்ந்த 23 வயது சம்ரா இந்த ஆண்டு தொடக்கத்தில் பியூனஸ் அயர்சில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.
மற்ற இந்திய வீராங்கனைகள் ஆஷி சோக்சி (589) 11-வது இடமும், அஞ்சும் மோட்ஜில் (586) 27-வது இடமும், ஸ்ரீயங்கா சடான்ஜி (582) 53-வது இடமும், நிஸ்சால் (580) 60-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இளவேனில் வெண்கலம் வென்றிருந்தார்.
___________________________________________________________________________________________________
விம்பிள்டன் பரிசு தொகை..?
லண்டனில், வரும் ஜூன் 30 முதல் ஜூலை 13 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 622 கோடி. இது, கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 35 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகம்.
முதல் சுற்றோடு திரும்பும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 76 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். இதேபோல இரட்டையர், கலப்பு இரட்டையர், வீல்சேர், ஜாம்பவான்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பந்து 'பிட்ச்' ஆகும் இடத்தை எலக்ட்ரானிக் முறையில் கண்காணிக்க உள்ளனர்.
___________________________________________________________________________________________________
கருண் நாயருக்கு பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் , கருண் நாயரை பாராட்டி பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்புவது என்பது எளிதானது அல்ல.
உள்ளூர் கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு ரன் குவித்துள்ளீர்கள் என்பது விஷயமல்ல. ஒரு போதும் நம்பிக்கையை இழக்காமல், விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேராடி மீண்டெழும் மனப்பாங்கு தான் முக்கியம். அது தான் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த அணிக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
___________________________________________________________________________________________________
இந்திய அணியில் ராதா யாதவ்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வரும் 28-ம் தேதி நடக்கிறது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அணியில் இடம் பிடித்து இருந்த 20 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சுசி உபாத்யாய் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீராங்கனையை அறிவித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவை மகளிர் தேர்வு கமிட்டி மாற்று வீராங்கனையாக தேர்வு செய்துள்ளது.
___________________________________________________________________________________________________
ஐ.சி.சி. பதிவு வைரல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்கா 138க்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸி. அணி 2ஆம் நாள் முடிவில் 144க்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைனை ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் ரன் ஓடும்போது தெரியாமல் மோதினார்.
அடுத்ததாக ஆஸி. கீப்பர் அலெக்ஸ் கேரியை தென்னாப்பிரிக்க வீரர் மகாராஜா ரன் ஓடும்போது மோதினார். இந்த விடியோ காட்சிகளை ஐ.சி.சி. தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு டபிள்யூ.டபிள்யூ.இ. ஒலியுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக இரு அணிகளும் 100 சதவிகித உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
___________________________________________________________________________________________________
ஆலன் வரலாற்றுச் சாதனை
அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.சி. (மேஜர் லீக் கிரிக்கெட்) டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிக்காக விளையாடும் பின் ஆலன் அதிவேகமாக சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 151 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 269.08 ஆக இருந்தது.
எம்.எல்.சி. டி20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணி 269/5 ரன்கள் குவிக்க, வாஷிங்டன் பிரீடம் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து பின் ஆலன் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
___________________________________________________________________________________________________
தயாராகும் அஸ்டெகா மைதானம்
மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய எல்.இ.டி. திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், சி.சி.டி.வி. கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.
மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும். இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்
13 Jun 2025புதுடில்லி : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலை தவிர்க்க, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
ஒரு பவுன் ரூ.74,360-க்கு விற்பனை: மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
13 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 13) பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,360-க்கு விற்பனையானது.
-
மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களுக்கு தேர்வு : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Jun 2025சென்னை : மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி.
-
உயிர்வாழ்விற்கான போராட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு
13 Jun 2025ஜெருசலேம் : எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம் என ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
கடன் வசூல் ஒழுங்கு மசோதா உள்ளிட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
13 Jun 2025சென்னை : கடன் வசூல் ஒழுங்கு மசோதா உள்ளிட்ட 2 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
13 Jun 2025சென்னை : தேசதுரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ம் த
-
கீழடி அகழாய்வில் மேலும் சான்றுகள் கேட்கிறார்கள்: தமிழர்களின் வரலாற்றை மறைத்து அழிக்க முயற்சி : மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 Jun 2025சென்னை : கீழடி அகழாய்வில் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள், இது தொடர்பாக மேலும் சான்றுகள் தேவை என்று தமிழர்களின
-
உயிர் பிழைத்தது எப்படி? - விமான விபத்தில் தப்பித்த விஷ்வாஸ் குமார் பேட்டி
13 Jun 2025அகமதாபாத் : உயிர் தப்பியது எப்படி என விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஸ்வாஸ் குமார் பேட்டியளித்தார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்கா அறிவிப்பு
13 Jun 2025வாஷிங்டன் : ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்
-
நாட்டிற்காக சிறப்பானதை செய்ய அற்புதமான வாய்ப்பு: கவுதம் காம்பீர்
13 Jun 2025பெக்கன்ஹாம் : நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய இந்த அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்று இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் காம்பீர் எழுச்சி உரையாற்றினார்.
-
விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 Jun 2025அகமதாபாத் : அகமதாபாத் விமான விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டி? - திருச்சி த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு
13 Jun 2025திருச்சி : விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
-
கடவுள் தான் காப்பாற்றினார்: விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண் நெகிழ்ச்சி
13 Jun 2025அகமதாபாத் : விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார்.
-
வெடிகுண்டு மிரட்டல்: டில்லி வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்
13 Jun 2025புதுடில்லி : தாய்லாந்தில் இருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
-
மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
13 Jun 2025தென்காசி, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் தொடர்ந்து ஒரு வாரமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
-
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் விவகாரம்: அமெரிக்காவில் 25 நகரங்களில் கலவரம்
13 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-06-2025
13 Jun 2025 -
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக்குழு: த.வெ.க. தலைவர் விஜய்யுடன் சந்திப்பு
13 Jun 2025பரந்தூர் : பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் சந்தித்துள்ளனர்.
-
கருப்பு பட்டையுடன் வீரர்கள்
13 Jun 2025குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளா
-
அதிகாலையில் தெஹ்ரானில் குண்டு மழை: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
13 Jun 2025தெஹ்ரான் : ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
-
திடீர் தொழில்நுட்ப கோளாறு: திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
13 Jun 2025சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர், தொழில்நுட்பக் கோளாறு
-
என்னுடைய மூச்சுக்காற்று இருக்கும் வரை நானே தலைவர்: ராமதாஸ் உறுதி
13 Jun 2025தைலாபுரம் : தன்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கமாட்டேன், என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
குஜராத் விமான விபத்தில் 2 விமான பணிப்பெண்கள் உள்பட 10 ஊழியர்கள் பலி
13 Jun 2025குஜராத் : குஜராத் விமான விபத்தில் 2 விமானிகள் மற்றும் 10 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
அகமதாபாத்தில் பலியானவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி
13 Jun 2025மாமல்லபுரம் : அகமதாபாத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
அகமதாபாத் விமான விபத்து: 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
13 Jun 2025அகமதாபாத் : ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.