எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்த ஐ.பி.எல். சீசனில் லக்னோ அணியில் ரூ.30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி தனது சிறப்பான பந்துவீச்சினாலும் விக்கெட் எடுத்த பிறகு ’நோட்புக் செலிபிரேஷன்’ எனும் அவரது கொண்டாட்டத்தினாலும் கவனம் ஈர்த்தார். தொடர்ச்சியாக இந்தக் கொண்டாட்டத்தினால் அபராதம் விதிக்கப்பட்டாலும் திக்வேஷ் அஞ்சாமல் அதைச் செய்து வந்தார். இந்தக் கொண்டாட்டத்தினால் தனது ஊதியத்தில் 30 சதவிகிதம் அபராதமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். சீசனில் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்த திக்வேஷ் ரதி 8.25 எகானமியுடன் பந்துவீசினார். உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி எடுத்த 5 விக்கெட்டுகள் வீடியோவை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரி 2025இல் உள்ளூர் போட்டியில் 28 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார். உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் ரதி 5 பந்துகளுக்கும் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்த வீடியோவை பார்த்து வியந்தேன். ஐ.பி.எல். 2025-இல் லக்னோ அணியில் நட்சத்திரமாக மாறுவதற்கான சிறிய முன்னோட்டம்தான் இந்த வீடியோ என்றார்.
_______________________________________________________________________________________________
ஒரே ஆட்டத்தில் 3 சூப்பர் ஓவர்கள்
நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
முதல் சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 19 ரன்கள் அடிக்க இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 17 ரன்களை அடித்தது. இதனால் 3 ஆவது சூப்பர் ஓவருக்கு ஆட்டம் நகர்ந்தது. அதில் நேபாளம் அணி முதல் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது.
_______________________________________________________________________________________________
சென்னையில் டென்னிஸ் தொடர்
250 சர்வதேச புள்ளிகளை கொண்ட டபிள்யூ.டி.ஏ. மகளிர் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபரில் சென்னையில் 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி டபிள்யூ.டி.ஏ. 250 மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் டபிள்யூ.டி.ஏ. 250 டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் டபிள்யூ.டி.ஏ. 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் மீண்டும் நடைபெற உள்ளன.
_______________________________________________________________________________________________
பி.எஸ்.ஜி. அணி அபாரம்
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 10-0 என்ற கோல் கணக்கில் ஆக்லாந்து சிட்டியை (நியூசிலாந்து) துவம்சம் செய்தது. ஜமால் முசியாலா 3 கோலும், தாமஸ் முல்லர், ஒலிசி, கோமன் தலா 2 கோலும் அடித்தனர்.
'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மாட்ரிட்டை (ஸ்பெயின்) தோற்கடித்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போடாபோகோ (பிரேசில்) அணி 2-1 என்ற கோல் கணக்கில் சியட்டி சவுன்டெர்ஸ் எப்..சி.யை (அமெரிக்கா) வீழ்த்தியது. 'ஏ' பிரிவில் பால்மிராஸ் (பிரேசில்)- எப்.சி.போர்டோ (போர்ச்சுகல்) இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
_______________________________________________________________________________________________
மேத்யூஸ்க்கு கார்டு ஆப் ஹானர்ஸ்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு சக வீரர்கள் கார்டு ஆப் ஹானர்ஸ் கொடுத்து மரியாதை செலுத்தினர். இவர் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (சராசரி: 45), 16 சதங்களுடன் 8,167 ரன்கள் விளாசியுள்ளார். 226 ஒருநாள் போட்டிகள், 5,916 ரன்கள் (சராசரி: 40), 3 சதங்கள் விளாசினார். பந்து வீச்சில் 120 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் 90 டி20 போட்டிகளில் 1,416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.
2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2009, 2012 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் இலங்கை அணியின் வீரராக மேத்யூஸ் இருந்தார். 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லசித் மாலிங்காவுடன் இணைந்து 9-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 132 ரன்கள் என்ற உலக சாதனையை படைத்தார். 2014 ஆசியக் கோப்பையை இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் கைப்பற்றியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது 10-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Jul 2025புது டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
பிரத்யேக பேருந்தில் ரோடு ஷோ தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு- ஷோ தொடங்கினார்.
-
அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டு 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: அமைச்சர்
07 Jul 2025சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.