முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறினார்: ஈரான் மீது தாக்குதலை நடத்த டிரம்ப் திட்டமா?

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      உலகம்
Tarmpu 2025-06-17

Source: provided

ஒட்டாவா : ஜி 7 மாநாட்டில் இருந்து அவசரமாக டிரம்ப் வெளியேறிய நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த மாநாடு நேற்று நிறைவடைகிறது.

இதனிடையே, ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாதியிலேயே வெளியேறி உள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில், ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டு உடனடியாக வெளியேறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இன்றிரவே வெள்ளை மாளிகை திரும்ப உள்ளார்  எனக் குறிப்பிட்டுள்ளார். கனடா பயணத்தை பாதியில் முடித்துவிட்டு திரும்புவதற்கு முன்னதாக, ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளப் பதிவில்,

நான் கையெழுத்துப் போடக் கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்துயிட்டு இருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது வெட்கக் கேடானது. இதனால், மனித வாழ்க்கைதான் வீணாகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனப் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா திரும்ப உள்ள ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள அவசரகால அறையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை தயாராக இருக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, ஈரானை அமெரிக்காவும் தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை வைத்து வருகின்றது. இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் பங்கர் - பஸ்டர் குண்டுகளைக் கொண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து