எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது. ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகினார். இதனால் 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார். இது இந்திய அணிக்கு பின்னடைவாகும். ரிஷப் பண்டிற்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
64 பந்துகளில் ஆயுஷ் சதம்
இந்திய யு19 கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் யு19 அணியுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தன. 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 309 ரன்களும், இந்தியா 279 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 324 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா இந்தப் போட்டியின் கடைசி நாளில் விரட்டியது. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த விஹான் மல்ஹோத்ரா உடன் 100 ரன்கள் மற்றும் அபிக்யான் குந்து உடன் இணைந்து 117 ரன்கள் பாரட்னர்ஷிப் அமைத்தார் ஆயுஷ் மாத்ரே. அவர் 64 பந்துகளில் சதம் கடந்தார். இந்திய அணி 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. கடைசி நாளின் ஆட்ட நேரம் முடிந்த காரணத்தால் இந்த டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதம், 2-வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் விளாசி இருந்தார் 18 வயதான ஆயுஷ் மாத்ரே.
தெ.ஆ. அணியில் ப்ரீவிஸ்
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டிகள் வரும் ஆக.10ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எய்டன் மார்கரம் டி20 அணிக்கும் டெம்பா பவுமா ஒருநாள் அணிக்கும் கேப்டாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட்டில் ஜிம்பாம்வே அணிக்கு எதிராக அறிமுகமான சுழல் பந்துவீச்சாளர் ப்ரீனிலான் சுப்ராயன் டி20 அணியில் அறிமுகமாகியுள்ளார்.
சி.எஸ்.கே. அணியில் அசத்திய டெவால்டு ப்ரீவிஸ்ஸும், லுகான் - ட்ரெ பிரிடோரியஸும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்கள். டி20 போட்டிகள் ஆக.10, 12,16 ஆம் தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் ஆக.19,22,24 ஆம் தேதியும் தொடங்குகின்றன. கடைசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் தோற்றது.
காதலரை அறிவித்த வீனஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் (45 வயது) ஒற்றையர் பிரிவில் 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். டிசி ஓபன் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் 6-3, 6-4 என்ற நேர்செட்களில் சக அமெரிக்க வீராங்கனையை வென்றார். போட்டி முடிந்த பிறகு அவர் பேசியதாவது: கடற்கரையில் ஓய்வெடுக்க வேண்டுமென எனக்குப் பல நேரங்களில் தோன்றியிருக்கிறது. டென்னிஸ் விளையாடுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா நண்பர்களே? அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது தெரியுமா? வழக்கமான 9 - 5 வேலையை விட கடினமானது.
நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருக்கும். இந்தமாதிரி நேரங்களில் அவர் எனக்கு உற்சாகம் அளிக்கிறார். அவர் நான் விளையாடியதைப் பார்த்ததே இல்லை என்றார். டென்மார்க்கைச் சேர்ந்த ஆண்ட்ரியா பிரெடி இத்தாலியில் வாழ்ந்து வருகிறார். நடிகராக இருக்கும் இவரை வீனஸ் வில்லியம்ஸ் எப்போது சந்தித்து காதலித்தார் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இத்தாலியில் மாடலாக இருக்கும் ஆண்ட்ரியா பிரெடி பல இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.
ஓய்வு குறித்து ஆண்டர்சன்
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஸ்விங் பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி போட்டியில் விளையாடினார். இந்த நிலையில் தான் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டர்சன் கூறுகையில் "நான் கடந்த வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை.
கேப்டன், பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வாரிய இயக்குனருடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். அப்போது அவர்கள் வேறு திசையில் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்கள்" என்றார். 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீ்ழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
வீடு வீடாக சென்று பொதுமக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
25 Jul 2025சென்னை, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
வைகோ, கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
25 Jul 2025சென்னை, பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் தி.மு.க.
-
வைகோ தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியீடு
25 Jul 2025சென்னை : தமிழகத்தில் 8 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதற்கான பிரச்சார அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
-
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்
25 Jul 2025கடலூர், போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-07-2025.
25 Jul 2025 -
புதிய பிரசாரத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
25 Jul 2025புதுக்கோட்டை, 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரசார முன்னெடுப்பை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
-
5-வது நாளாக சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம்
25 Jul 2025சென்னை : ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு 5-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகி
-
மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு
25 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர்.
-
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Jul 2025ராமநாதபுரம், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
25 Jul 2025புதுடில்லி, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், பார்லிமென்டை சமூகமாக நடத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
-
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
25 Jul 2025மாலே, 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி அதிபர் மொய்சுவை சந்தித்து பேசினார்.
-
தாய்லாந்து - கம்போடியா மோதல்: முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சம்
25 Jul 2025சுரின் : தாய்லாந்து - கம்போடியா மோதலால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
-
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
25 Jul 2025சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
-
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது
25 Jul 2025சூலூர்பேட்டை : திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.295 கோடி
25 Jul 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை: இந்தியா சாதனை
25 Jul 2025புதுடில்லி, ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
-
பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்
25 Jul 2025சென்னை, பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
-
கோடீஸ்வரர் பட்டியலில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
25 Jul 2025நியூயார்க் : கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முன்னணி கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்தார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்: ஜோ ரூட் வரலாற்று சாதனை
25 Jul 2025மான்செஸ்டர் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
-
இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
25 Jul 2025புதுடெல்லி : இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடியை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
25 Jul 2025ஆப்பியா : தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி., 5-வது நாளாக முடங்கியது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம்
25 Jul 2025புதுடெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் நேற்று 5-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் முடங்கின.
-
வாக்காளர்கள் சிறப்பு திருத்த விவகாரம்: நெருப்புடன் விளையாட வேண்டாம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை : பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கத்திற்கு கடும் கண்டனம்
25 Jul 2025சென்னை : வாக்காளர்கள் சிறப்பு திருத்தம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நெருப்புடன் விளையாடதீர்கள் என்றும் எச்சரிக்க
-
பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம்
25 Jul 2025புதுடில்லி : பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
காட்டுப் பன்றிகள் சுட்டு பிடிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
25 Jul 2025திருநெல்வேலி, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டுப் பன்றிகள் சுட்டுப் பிடிக்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.