முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றை காலில் ரிஷப் பண்ட் எடுத்த ரன்களை திருப்பி கொடுத்த பவுலர்கள் : நாசர் உசேன் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

மான்செஸ்டர் : ரிஷப் பண்ட் ஒற்றை காலில் போராடி எடுத்த ரன்களை இந்திய பவுலர்கள்  திருப்பி கொடுத்து விட்டதாக நாசர் உசேன் விமர்சனம் செய்துள்ளார்.

மான்செஸ்டரில்...

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில்  தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

வலுவான அஸ்திவாரம்... 

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி - பென் டக்கட் களமிறங்கினர். இந்திய பந்து வீச்சை சர்வ சாதாரணமாக நொறுக்கிய பென் டக்கட்டும், ஜாக் கிராவ்லியும் துரிதமாக ரன் திரட்டினர். வலுவான அஸ்திவாரம் போட்ட இவர்கள் 166 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜாக் கிராவ்லி 84 ரன்களில், ஜடேஜாவின் சுழலில் கேட்ச் ஆனார். பென் டக்கட் 94 ரன்களில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் சிக்கினார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.

ரிஷப் பண்ட் காயம்...

முன்னதாக இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது காலில் காயமடைந்த ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ரிஷப் பண்ட், வலியையும் பொருட்படுத்தாமல் நொண்டியபடி களத்திற்கு வந்து பேட்டிங் செய்தார். அவரது வருகையை கண்டு உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமான வரவேற்பு அளித்தனர். அப்படி ஒற்றைக்காலில் போராடி அரைசதத்தை கடந்த ரிஷப் பண்ட் 54 ரன்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினார்.

நாசர் உசேன் விமர்சனம்...

இந்நிலையில் ரிஷப் பண்ட் ஒற்றை காலில் போராடி அடித்த ரன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்து விட்டதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் நாசர் உசேன் விமர்சித்துள்ளார்.

மோசமான பவுலிங்... 

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "மான்செஸ்டரில் நிலைமைகள் சற்று மாறின, ஆனால் அங்கே இந்தியா மிகவும் மோசமாக பவுலிங் செய்தார்கள். வானிலை மாறியதால் உங்களால் பிட்ச்சின் இருபுறமும் பவுலிங் செய்ய முடியவில்லை. ஆனால் நிறைய பந்துகள் காலில் போடப்பட்டன. உண்மையைச் சொன்னால், கேப்டன் எடுத்த முடிவுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. நீங்கள் சிராஜுக்கு பதிலாக ஒரு வாரம் முன்பு வரை அணியிலேயே இல்லாத கம்போஜிடம் புதிய பந்தை கொடுத்தீர்கள். அந்த சூழ்நிலையில் நான் சிராஜை பவுலிங் செய்ய வைத்திருப்பேன்.

மதிப்புள்ள ரன்கள்...

மற்றொரு பகுதியில் பும்ராவை பயன்படுத்தியிருப்பேன். பிட்ச்சில் சில பகுதிகளில் பச்சை புற்கள் இருப்பது பற்றி நாம் பேசினோம். அதனை பயன்படுத்தி பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். ரிஷப் பண்ட் ஒற்றைக்காலில் களத்திற்கு சென்று இந்தியாவுக்காக மதிப்புள்ள ரன்களை எடுத்தார். ஆனால் பந்துவீச்சாளர்கள் அந்த ரன்களை இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்து விட்டார்கள்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து