எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
பும்ரா இல்லாததால்...
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்தத் தொடரின்போது ஜஸ்பிரீத் பும்ரா விளையாடாத 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது என்ற ரீதியில் செய்திகள் வெளிவந்தன.
தற்செயலான நிகழ்வு...
இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் கூறியது: “ஜஸ்பிரீத் பும்ரா விளையாடாத 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது தற்செயலான நிகழ்வு தான். வர் விளையாட 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறித்து பலர் விவாதித்து வருகின்றனர். இதை பெரிதாக எண்ணக்கூடாது. அதையும், இதையும் முடிச்சுப் போட்டு பார்ப்பது சரியல்ல. ஜஸ்பிரீத் பும்ராவின் திறமையை நான் நன்றாக அறிவேன். அவரது தரத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
நம்ப முடியாதவை...
பும்ராவின் தரம் விதிவிலக்கானது. கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகள் நம்ப முடியாதவை. எந்த சந்தேகமும் இல்லாமல் அவர் திறமையான வீரர் என்று சொல்வேன். சிறப்பாக பந்துவீசி இந்திய அணியில் ஒரு நிலையான வீரராக அவர் வலம் வருகிறார். 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னை சிறந்த வீரர் என்று நிரூபித்து வருகிறார். மற்ற எல்லோருடனும் ஒப்பிடும்போது அவரை நான் முதலிடத்தில் வைப்பேன்.
மறக்கக்கூடாது...
இங்கிலாந்தில் அவர் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் 2 முறை 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன்மூலம் அவரது செயல்பாட்டை நாம் புரிந்துகொள்ள முடியும். அவர் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றியிருக்கிறார். அதை யாரும் மறக்கக்கூடாது.
திருப்புமுனை...
அதேபோல் வாஷிங்டன் சுந்தர் இந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றி தேர்வாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார். அவர் களத்தில் விளையாடும் போதெல்லாம் அணிக்கு தேவையானதை செய்தார். 4-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றியது திருப்புமுனையாக அமைந்தது.
சரியான முடிவு...
4-வது டெஸ்ட் போட்டியின்போது ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஜோடி மிகச்சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. அவர்கள் போட்டியை டிராவில் முடிப்பதற்காக சிறப்பாக விளையாடினர். அந்தப் போட்டியின்போது இந்திய அணி நிர்வாகமும், வீரர்களும் எடுத்த முடிவு சரிதான். போட்டியை முன்னதாகவே முடித்துக் கொள்ள இந்திய அணி ஒப்புக்கொள்ளாதது சரியான முடிவுதான்” என்று சச்சின் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-08-2025.
07 Aug 2025 -
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குறித்து போலி செய்தி: தமிழக அரசு எச்சரிக்கை
07 Aug 2025சென்னை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குறித்து போலி செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
-
மாநில கல்வி கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Aug 2025சென்னை, மாநில கல்வி கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
புதுச்சேரி நெசவு தொழிலாளர்களுக்கு 20% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ரங்கசாமி
07 Aug 2025புதுச்சேரி, தொழிலாளர்கள் நெசவுக் கூலி அகவிலைப்படியில் 20 சதவீதம் ஆகஸ்ட் முதல் உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
-
அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு இன்று விசாரணை
07 Aug 2025சென்னை, அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி. இரு அவைகளும் ஒத்தி வைப்பு
07 Aug 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
-
கொடிக்கம்பம் விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Aug 2025மதுரை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில், அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வ மாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டத
-
பிரதமர் மோடியுடன் கமல் எம்.பி. சந்திப்பு
07 Aug 2025புதுடில்லி, பிரதமர் மோடியை , ராஜ்யசபா எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு: ராகுல் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
07 Aug 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பா.ஜ.க. வாக்குகளை திருடுகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
உரிய காலத்துக்குள் அனுமதி வழங்காவிட்டால் திருவிழா செலவை போலீசாரே ஏற்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
07 Aug 2025சென்னை, 'கோவில் திருவிழாக்களுக்கு உரிய காலத்துக்குள் அனுமதி வழங்காவிட்டால் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வ
-
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு
07 Aug 2025புதுடெல்லி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் என்கவுன்ட்டர் நடந்தது ஏன்..? மாவட்ட எஸ்.பி விளக்கம்
07 Aug 2025உடுமலை, உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி
-
அன்புமணிக்கு என்ன குறை வைத்தோம்: ராமதாஸ் வேதனை
07 Aug 2025சென்னை, என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறைவைத்தோம் என்று ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
-
சமூகத்துக்கு பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கோரிக்கை
07 Aug 2025சென்னை, எம்.எஸ்.சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்: எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி
07 Aug 2025சென்னை, அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐ.ஏ.எஸ்.
-
பீகார் வாக்காளர்களின் விவரங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Aug 2025புதுடெல்லி, பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி
07 Aug 2025புதுடெல்லி, தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
-
இந்திய டி-20 அணியில் ஷ்ரேயாஸ் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறார்
07 Aug 2025மும்பை: ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள
-
அமெரிக்காவுக்கு வலிமையுடன் பதிலளிக்க வேண்டும்: பினராயி
07 Aug 2025திருவனந்தபுரம், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு குறித்து இ.பி.எஸ்.-ன் சான்றிதழ் எங்களுக்கு தேவை இல்லை: அமைச்சர் ரகுபதி
07 Aug 2025புதுக்கோட்டை, சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு தேவை இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
வெள்ளம், நிலச்சரிவு: இமாசல்லில் பலி 199 ஆக உயர்வு
07 Aug 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 199 பேர் பலியாகியுள்ளனர்.
-
கானாவில் ஹெலிகாப்டர் விபத்து: 2 அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி
07 Aug 2025கானா: மேற்கு ஆப்பரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்தில் 2 மந்திரிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகத்திற்கான கல்வி கொள்கை: இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Aug 2025சென்னை: தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 8) வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
07 Aug 2025சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆடித்தபசு திருவிழா கடந்த 28
-
பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்: சச்சின்
07 Aug 2025மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.