எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் திருவாவடுதுறை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்க குடத்தில் களபம் மற்றும் வாசனை திரவியங்கள் நிரப்பி அம்மனுக்கு களப அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பிறகு தினமும் காலை 10 மணிக்கு களப பூஜை நடைபெற்து. வெள்ளிக்குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது.
அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க வெள்ளி குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து, கருவறைக்குள் கொண்டு சென்று வெள்ளிக்குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த களப அபிஷேகத்தை மணலிக்கரைமாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ நடத்தினார்.
பின்னர் அம்மனுக்கு தங்க கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க பொருளாளரும் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலருமான வைகுண்டபெருமாள் தொடங்கி வைத்தார். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடந்தது.
இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்று வந்த களப பூஜை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பிரம்மாண்ட ஹோமம் நடந்தது. இதற்காக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள தெற்கு மண்டபத்தில் கோவில் யாக குண்டம் அமைத்து பூஜையை நடத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
17 Aug 2025சென்னை : சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
காஷ்மீரில் மீண்டும் துயரம்: நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
17 Aug 2025கதுவா : ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
-
குப்பை அள்ளும் பணியில் இருந்து தூய்மை பணியாளர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி : திருமாவளவன் ஆவேசம்
17 Aug 2025சென்னை : தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி என்று வி.சி.க.
-
தருமபுரிக்கான பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Aug 2025தருமபுரி : தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழகத்தில் விரைவில் முடியும் தருவாயில் உள்ள 24 ரயில் நிலைய பணிகள்: பிரதமர் திறந்து வைக்கிறார்
17 Aug 2025சென்னை, : தமிழகத்தில் மொத்தம் 24 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி இந்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது.
-
இணைய வழியில் விண்ணப்பித்த உடனே விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் புதிய திட்டம் : தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
17 Aug 2025தருமபுரி : விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
-
அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தை: புதினிடம், மெலனியாவின் கடிதத்தை வழங்கிய ட்ரம்ப்
17 Aug 2025அமெரிக்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
திருமாவளவனின் சித்தி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
17 Aug 2025சென்னை : அரியலூர் மாவட்டம் அங்கனூரை சேர்ந்தவர் திருமாவளவன் (63).
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-08-2025.
17 Aug 2025 -
ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
17 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பில் 2 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
-
மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறுவோரை நம்பாதீர்கள் : அருண் ஐ.பி.எஸ். எச்சரிக்கை
17 Aug 2025சென்னை : மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள் என்று ஐ.பி.எஸ். அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.
-
ஆழியார் அணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றம்
17 Aug 2025பொள்ளாச்சி : ஆழியார் அணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை கண்டித்து விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி
17 Aug 2025திருச்சி : சுப்ரீம் கோர்ட் உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.
-
2024 பாராளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
17 Aug 2025சென்னை : 2024 பாராளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை தி.மு.க.
-
திருமாவளவனுக்கு முதல்வர் வாழ்த்து
17 Aug 2025சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் மாபெரும் பேரணியை தொடங்கினார் ராகுல்
17 Aug 2025டெல்லி : வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் மாபெரும் பேரணியை ராகுல்காந்தி நேற்று தொடங்கினார்.
-
சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா தாயகம் திரும்பினார் : டெல்லி முதல்வர் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு
17 Aug 2025டெல்லி : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்பினார்.
-
சிறப்பு பொதுக்குழுவில் பா.ம.க. தலைவராக ராமதாஸ் தேர்வு : 37 தீர்மானங்கள் நிறைவேற்றம்
17 Aug 2025விழுப்புரம் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
-
தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் கவர்னர் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கு
17 Aug 2025தருமபுரி: தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் கவர்னர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருமாவளவனுக்கு பா.ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து
17 Aug 2025சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு : கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
17 Aug 2025சென்னை : சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர்.
-
த.வெ.க. 2-வது மாநில மாநாடு: பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக்குழு அமைப்பு
17 Aug 2025மதுரை: தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டையொட்டி மதுரை பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி சூடு
17 Aug 2025சண்டிகர்: அரியானாவின் குருகிராமை சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் வீட்டில் நேற்று அதிகாலை துப்பாக்கி சூடு நடைபெற்றது.
-
கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
17 Aug 2025சென்னை: கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் என்று அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
17 Aug 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்த