எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார். மராட்டியத்தை சேர்ந்த 29 வயதான மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா வருகிற 23-ந்தேதி அவரை கரம் பிடிக்க உள்ளார்.
இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள், வீராங்களைகள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்மிர்தி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணம் நிச்சயமானதை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ் ஆகியோருடன் நடனமாடுவது போன்ற விடியோவை வெளியிட்டுள்ளார்.
____________________________________________________________________________________
தென்னாப்பிரிக்க வீரர் விலகல்
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் இன்று (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ககிசோ ரபாடா, காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.
இது தொடர்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ககிசோ ரபாடா விலகுகிறார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஆடுகளத்தைக் காட்டிலும் குவாஹாட்டி ஆடுகளம் நன்றாக காணப்படுகிறது. ரபாடாவுக்குப் பதிலாக மாற்று வீரரை நாளை காலையில் நிலவும் சூழலைக் கொண்டு முடிவு செய்வோம் என்றார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________
டெஸ்ட் போட்டியில் நிலநடுக்கம்
வங்க தேசத்தில் நேற்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தாக்கம் வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் எதிரொலித்தது. இதனால் ஆட்டம் 3 நிமிடம் தடைபட்டது. அனைத்து வீரர்களுகளும் தரையில் அமர்ந்து கொண்டனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் மைதானத்தை விட்டு வெளியேறினர். அயர்லாந்து அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது
____________________________________________________________________________________
காம்பீருக்கு ரகானே எதிர்ப்பு
உள்ளூர் கிரிக்கெட்டில் கூட சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்படுவதில்லை என்று இந்திய முன்னணி வீரர் ரகானே தெரிவித்துள்ளார். அதனால் பயிற்சியில் கூட அப்படிப்பட்ட பிட்ச்சில் பயிற்சிகளை எடுக்காத இந்திய வீரர்களை தோல்விக்கு காரணமாக சொல்லாதீர்கள் என்று காம்பீரை அவர் சாடியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “டெஸ்ட் போட்டிகளில் நாம் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை உருவாக்குகிறோம். உங்களிடம் தரமான ஸ்பின்னர்கள் இருந்தால் நீங்கள் அதை செய்யலாம். ஆனால் அதில் பந்து எப்போது சுழல தொடங்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை முதல் நாளிலேயே பந்து சுழலுவதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் அதே மாதிரியான பிட்ச்கள் இருக்க வேண்டும்.
ஏனெனில் உங்கள் வீரர்கள் அத்தகைய பிட்ச்களில் விளையாடப் போகிறார்கள் என்றால், அதே அனுபவம் அவர்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கிடைக்க வேண்டும். உள்நாட்டில் நாம் பொதுவாக பிளாட் அல்லது வேக பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாடுகிறோம். ஆனால் அது பொதுவாக 3-வது நாளிலிருந்துதான் தொடங்கும். முதல் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்ய சிறந்ததாக இருக்கும். சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாட நீங்கள் வித்தியாசமாக தயாராக வேண்டும். இங்கே வீரர்களை நாம் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். அவர்கள் இப்படிப் பட்ட பிட்ச்களில் விளையாடியதில்லை. பயிற்சியின்போது கூட அவர்கள் அத்தகைய பிட்ச்களில் பயிற்சி எடுப்பதில்லை” என்று கூறினார்.
____________________________________________________________________________________
லக்ஷயா அரையிறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர்களான லக்ஷயா சென் - ஆயுஷ் ஷெட்டி நேருக்கு நேர் மோதினர். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் 23-21 மற்றும் 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2025.
21 Nov 2025 -
துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி உயிரிழப்பு
21 Nov 2025துபாய் : துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெ
-
போலீஸ் அனுமதி மறுப்பு எதிரொலி: விஜய் பொதுக்கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்த த.வெ.க. முடிவு
21 Nov 2025சேலம், விஜய் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேறு ஒரு நாளில் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
21 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக அவ
-
அரசியல் கட்சி பொதுக்கூட்டம், ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்விற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு
21 Nov 2025சென்னை : அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்ன
-
மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயரால் தமிழக வாக்காளர்கள் மத்தியில் குழப்பம்
21 Nov 2025சென்னை : மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் வரும் தேர்தலில் 3 டி.வி.கே.
-
வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: 6 பேர் உயிரிழப்பு
21 Nov 2025டாக்கா, வங்காளதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
21 Nov 2025சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.2025) சென்னை ஹாரிங்டன் சாலை வேம்புலி அம்மன் திட்டப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும
-
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை: கவுகாத்தியில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் : புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
21 Nov 2025கவுகாத்தி : இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மெக்சிகோவின் பாத்திமா போஷ் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு
21 Nov 2025பாங்காக், மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை மெக்சிகோ பாத்திமா போஷ் வென்றார்.
-
நாம் அனைவரும் எஸ்.ஐ.ஆர். பணியை ஆதரிக்க வேண்டும் : உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
21 Nov 2025காந்திநகர் : நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்
21 Nov 2025புதுடெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு: சபரிமலையில் கட்டுக்குள் வந்தது பக்தர்கள் கூட்டம்
21 Nov 2025சபரிமலை, தரிசன முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைத்ததை அடுத்து சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
21 Nov 2025கிருஷ்ணகிரி : தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.
-
கா்நாடக அரசியலில் திடீர் குழப்பம்: துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி
21 Nov 2025பெங்களூரு : முதல்வர் சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் துணை முதல்வ
-
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூர், திருவாரூரில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்
21 Nov 2025சென்னை : மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் மேலும் மோசமடையும் காற்றின் தரம்
21 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வரும் நிலையில், அங்கு நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
-
கோவை சர்வதேச திரைப்பட விழா: 81 நாடுகளின் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன
21 Nov 2025சென்னை, வருகிற 28-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட கோவாவில் தொடங்கியது. இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
21 Nov 2025திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை : உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Nov 2025மதுரை : சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி
21 Nov 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர்.
-
பாக்.கில் தலிபான் பயங்கரவாதிகள் 23 பேர் சுட்டுக்கொலை
21 Nov 2025இஸ்லாமாபாத், 23 தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுகொன்றது.
-
மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகிறார்: விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி
21 Nov 2025சென்னை, அடுத்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகும் விதமாக விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
-
அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
21 Nov 2025புதுடெல்லி, அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகளை முடக்கியுள்ளதை அடுத்து அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு, தற்போது ரூ
-
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு நெருக்கடி: சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமார் கைது
21 Nov 2025சபரிமலை : சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமாரை போலீசார் கைது செய்தனர்.


