எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
டிட்வா புயல் மழையினை முன்னிட்டு, அடையாறு மண்டலம், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களில் நீர் நிறைந்துள்ளதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது;-
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 45 ஏக்கர் பரப்பளவில் கோவை மாவட்டத்தில் செம்மொழி பூங்கா ஒன்றினை திறந்து வைத்து, அந்த செம்மொழி பூங்கா இன்றைக்கு கோவை மாவட்டத்திற்கு ஒரு மிக பெரிய அளவிலான புகழை சேர்க்கும் வண்ணம் ஒரு பூங்காவாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகைகளில் சென்னையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு 160.86 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்த 160.86 ஏக்கர் பரப்பளவில் 118 ஏக்கர் நிலபரப்பிளான ஒரு சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கிவைத்த நிலையில், அந்த பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இங்கே நாற்று பண்ணைகள் திறந்துவைக்கப்பட்டு மக்களுக்கு விநியோக மையம் ஒன்றும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 118 ஏக்கர் நிலபரப்பிலான சுற்றுச்சூழல் பூங்காவில் ஒரு மிக சிறந்த வகையில் புதிதாக 4 குளங்கள் வெட்டி மழைநீர் சேமிக்கின்ற அளவுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஏற்கேனவே இந்த மைதானத்தில் 2 குளங்கள் இருந்தன. அந்த 2 பெரிய குளங்கள் இன்றைக்கு தூர்வாரி ஆழமாக்கப்பட்டு அகல படுத்தப்பட்டுள்ளன. அதோடு மட்டும் அல்லாது புதிய 4 குளங்கள் வெட்டி சீரமைக்கப்பட்டுள்ளன.
24.50 கோடி லிட்டர் மழை நீரை சேர்த்து வைக்ககூடிய அளவுக்கு இன்றைக்கு 6 குளங்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதோடு மட்டும் அல்லாது அருகில் வேளச்சேரி பெருங்குடி சாலையில் ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றி ஆறு வழி நீர் பாதை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கே இருந்த உபரி நிலங்களில் ஒரு 3.50 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு பெரிய குளங்கள் வெட்டப்பட்டன. அந்த குளங்களை பொருத்தவரை இன்றைக்கு 4.25 கோடி லிட்டர் மழைநீர் தேக்கி வைக்கும் அளவிற்கு அங்கே குளங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளன. ஆக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமையபெற்றுள்ள இந்த 12 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகியிருக்கிற 6 குளங்களில் 24.50 கோடி மழைநீரை சேமிக்க முடியும். வேளச்சேரியில் 3.50 ஏக்கர் நிலப்பரப்பில் வெட்டப்பட்டுள்ள குளங்களில் 4.25 கோடி லிட்டர் மழைநீரை சேமித்து வைக்க முடியும். ஆக ஒட்டு மொத்தமாக 28.75 கோடி லிட்டர் மழைநீரை சேமித்து வைக்க கூடிய குளங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
வடகிழக்கு பருவமழை 17.10.2025 அன்று தொடங்கி நேற்று காலை 10 மணி வரை 54.8 செ.மீ அளவுக்கு பொழிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 01.12.2025 முதல் 04.12.2025 காலை 10 மணி வரை ஏறத்தாழ 25.4 செ.மீ மழை பொழிந்துள்ளது. அதிகமான மழை பொழிந்துள்ள நிலையிலும் வெள்ள பாதிப்புகள், போக்குவரத்து பாதிப்புகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாத நிலை உள்ளதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவியல் பூர்வமாக எடுத்த நடவடிக்கைகளும், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் மேற்கொண்ட ஆய்வுகளுமே காரணமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் 12-ம் தேி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
04 Dec 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.12ம் தேதி முதல்வர் மு
-
அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடம்
04 Dec 2025ராய்ப்பூர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
-
ஏ.வி.எம்.சரவணனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: எல்லோரிடமும் அன்பாக பழகியவர் என புகழஞ்சலி
04 Dec 2025சென்னை, ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல சினிமா பட தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.
-
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு பா.ம.க. அழைப்பு
04 Dec 2025சென்னை, பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
04 Dec 2025திருப்பரங்குன்றம், தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணிக்கு தடை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
04 Dec 2025சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு தடை நீட்டிக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு
04 Dec 2025சென்னை, தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. மனு
04 Dec 2025புதுச்சேரி, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டிச.9-ல் புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்எஸ்பியிடம் த.வெ.க.வினர் நேற்று மனு அளித்துள்ள
-
கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
04 Dec 2025மதுரை, கவின் ஆணவப்படுகொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி நேரில் வரவேற்பு
04 Dec 2025புதுடெல்லி, 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின். அவரை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
-
பா.ம.க.வின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
04 Dec 2025டெல்லி, அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பா.ம.க. வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
04 Dec 2025சென்னை, தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரியானது: மதுரை உயர்நீதிமன்ற கிளை
04 Dec 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.
-
சையத் முஷ்டாக் அலி டி-20: மும்பை அணிக்காக களம் காண்கிறார் ரோகித் சர்மா.!
04 Dec 2025அகமதாபாத், சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கட்சிக்கு உரிமை கோரி வழக்கு: நீதிமன்றத்தில் ராமதாஸுக்கு வெற்றி; டெல்லியில் ஜி.கே.மணி பேட்டி
04 Dec 2025சென்னை, கட்சி உரிமை கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் ராமதாஸ்சுக்கு வெற்றி என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் ட்ரம்ப்: வீடியோ இணையத்தில் வைரல்
04 Dec 2025வாஷிங்டன், அமைச்சரவை கூட்டத்தில் தூங்கிய ட்ரம்ப் வீடியோ இணையத்தில் வைரல்லானது.
-
உக்ரைன் போர் விவகாரம் தொடர்பான அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது - அதிபர் புதின்
04 Dec 2025மாஸ்கோ, உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்க அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு மருத்துவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
04 Dec 2025கரூர், த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் வழக்கில் அரசு மருத்துவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
டி.என்.பி.எஸ்.சி. 2026 தேர்வு அட்டவணை வெளியானது: குரூப்-4 பணியிடங்களுக்கு 2026 டிசம்பரில் தேர்வு
04 Dec 2025சென்னை, குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6-ந்தேதியும் நடத்தப்படும் என்றும், குரூப்-4 பணிய
-
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம்
04 Dec 2025கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2025.
05 Dec 2025 -
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
உலகுக்கு பன்முக பாதையை காட்டியவர்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்
05 Dec 2025புதுடெல்லி : நமது பூமியில், அகிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார்.
-
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம்: துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
05 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.


