எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகையாகப் பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக, இதுவரை ரூ.33,464 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி வங்கிக் கடனாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆ
திதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த இதுவரை 3 லட்சம் இலவச வீட்டுமனை இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 1.83 லட்சம் புதிய பாசன மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், கட்டணமில்லா வேளாண் மின்சாரம் வழங்கிட கடந்த 5 ஆண்டுகளில் ரூ.26,723 கோடி செலவிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அரசு செயல்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ஒரு முறை பங்களிப்பாக ரூ.13 ஆயிரம் கோடியும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ.11 ஆயிரம் கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு வழங்கும். அதுபோன்று சிறப்புக் காலமுறை ஊதிய முறையில் பணியாற்றி வரும் பணியாளர்களின் சிறப்பு ஓய்வூதியம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய ஆணைகளை விரைவில் வெளியிடும். மத்திய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை அணுகி வருவதால், மாநில அரசிற்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது.
தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை மத்திய அரசு விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெருந்தடைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அத்திட்டங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ஆண்டுப் பணித் திட்டத்திற்கு, திட்ட ஒப்பளிப்பு வாரியம் அனுமதித்த தொகையை மத்திய அரசு முழுமையாக விடுவிக்காமல் உள்ளது. ரூ.3,548 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காததன் காரணமாக, அத்திட்டத்திற்குரிய முழுச் செலவையும் மாநில அரசே ஏற்றுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களின் சீரமைப்பு காரணமாக மாநிலங்கள் பெருமளவிலான வரி வருவாய் இழப்பினைச் சந்தித்து வரும் வேளையில், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய வரி வருவாயை மடைமாற்றும் வகையில் மத்திய அரசானது மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை விதிப்பதைத் தவிர்த்திட நமது அரசு வலியுறுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மேலும் கூடுதல் நிதி ஆதாரங்களை ஒதுக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான பேச்சு வார்த்தை நடத்திட கூட்டுப் பணிக் குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையான தீர்வை எட்டிடவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையே உள்ளதால், இத்திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது, அவற்றைவிடப் பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை நிராகரிப்பதன் மூலம் மெட்ரோ ரெயில் திட்டத்திலும் தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகும் நிலையே காணப்படுகிறது.
மத்திய அரசின் கல்விக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட மும்மொழிப் பாடத்திட்டத்தை இந்த அரசு ஏற்கவில்லை. 1968-ம் ஆண்டு அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கல்வி திட்டத்தினை நாம் நமது இரு கண்களைப் போலக் காத்து வருகிறோம். நம் உயிரோடும், உணர்வோடும் கலந்துள்ள செந்தமிழைக் காப்பதில் சமரசம் என்றே பேச்சிற்கே இடமில்லை. எச்சூழ்நிலையிலும் இக்கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் இந்த அரசு ஏற்காது. தற்போது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கையை மறைமுக இந்தி மொழித் திணிப்பாக மட்டுமே இவ்வரசு கருதுவதோடு, இதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை இவ்வரசு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
10 Mar 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை: மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 Mar 2026சென்னை, கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை மற்றும் மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும்: பார்லி., மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
10 Mar 2026சென்னை, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை அடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளிய
-
தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது: தனித்தேர்வர்கள் உள்பட 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
10 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப
-
ஈரான் போர் குறித்து ட்ரம்ப் - புதின் ஆலோசனை
10 Mar 2026மாஸ்கோ, ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
-
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை: பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட
-
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Mar 2026சென்னை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய
-
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை
10 Mar 2026லாகூர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
ராமேஸ்வரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்
10 Mar 2026திருச்சி, நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
10 Mar 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது.
-
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த பி.சி.சி.ஐ.
10 Mar 2026மும்பை, ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை இல்லாத அளவிலான பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
10 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
10 Mar 2026கொழும்பு, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
-
மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம்: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை
10 Mar 2026சென்னை, மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
10 Mar 2026திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன் கிழமை) மாலை நடக்கிறது.
-
வருகிற 13-ம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிற
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: வரும் 17-ம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகிறேன்: செந்தில் பாலாஜி
10 Mar 2026கரூர், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொர்பாக வருகின்ற மார்ச் 17 அன்று சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக தமிழக முன்னாள
-
போர் விரைவில் முடிவுக்கு வரும் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிவு
10 Mar 2026நியூயார்க், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது.
-
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி
10 Mar 2026கொல்கத்தா, தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு: எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தால் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக
-
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப்
10 Mar 2026வாஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் இதுவரை தாக்கப்பட்டதைவிட ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்
-
தமிழகத்தில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அச்சம்: மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி. கோரிக்கை
10 Mar 2026சென்னை, வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் தமிழகத்தில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், இந்த பிரச்சனையில் மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி.
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு: 60 பேரிடம் விஜய் நேர்காணல்
10 Mar 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட த.வெ.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 60 பேரிம் விஜய் நேற்று நேர்காணல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
10 Mar 2026மும்பை, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் நேற்று நல்ல ஏற்றம் கண்டன.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரம்.
- திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.


