இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதர்வாவு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்'
அதர்வாவு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்'
மிக பெரிய பட்ஜெட்.... தலை சிறந்த நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்.... இந்த இரண்டு சிறப்பம்சங்களையும் வலுவாக உள்ளடக்கி உருவாகி வருகிறது கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, ஆர். அஜய் ஞானமுத்து இயக்க இருக்கும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படம்.
"எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பி கொண்டு வருகிறோம்....முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாக செயல்படுவது கதை களம் தான்.... அந்த கதை களத்தை தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குனர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.
சிறந்த நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களை போல இந்த படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது. இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம். அது தான் எங்கள் கதையின் தனித்துவமான சிறப்பு. அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, தெலுங்கு திரையுலகின் நம்பகமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷி கண்ணாவை நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம்.. நிச்சயமாக அவரின் இந்த வருகை படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும். தற்போது எங்கள் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக இந்தியாவின் முன்னணி நபர்களுள் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் மூலம் தேசிய அளவில் எங்கள் திரைப்படம் பேசப்படும் என முழுமையாக நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் என சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவது, எங்கள் படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் எங்கள் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் துவங்க இருக்கிறோம். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் எங்கள் 'இமைக்கா நொடிகள்' மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. 'இமைக்கா நொடிகள்' படத்தை பார்க்க வரும் ஒவ்வொருவரும் தங்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட மாட்டார்கள்...." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் சி ஜெ ஜெயக்குமார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 1 day 18 hours ago |
கீரை ஆம்லெட்![]() 4 days 17 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 1 day ago |
-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?
26 Mar 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி : 2ஆவது தங்கம் வென்றது இந்தியா
26 Mar 2023புதுடெல்லி : உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் நிது கங்காசையடுத்து இந்திய வீராங்கனை சவீதி புரா தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-26-03-2023
26 Mar 2023 -
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல 2 நூற்றாண்டுகள் தேவை : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
26 Mar 2023மதுரை : தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
இம்ரான்கானுக்கு இன்று வரை ஜாமீன் நீட்டிப்பு
26 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீனை இன்று திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய வம்சாவளி சிறுமி சுட்டுக்கொலை செய்த அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை
26 Mar 2023நியூயார்க் : அமெரிக்காவில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியை சுட்டு கொன்ற அமெரிக்கருக்கு மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
-
தமிழக சட்டசபையில் இன்று இரவு காங். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டம்
26 Mar 2023சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
தமிழகம், புதுச்சேரியில் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
26 Mar 2023சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு
26 Mar 2023மதுரை : மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
26 Mar 2023மயிலாடுதுறை : பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
குரூப்-4 தேர்வு முடிவு: குளறுபடிகளை சரி செய்ய தேர்வர்கள் கோரிக்கை
26 Mar 2023சென்னை : வெளியிடப்பட்டுள்ள குரூப் - 4 தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்து, சரியான முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழகம் - காசி இடையேயான உறவு: மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
26 Mar 2023புதுடெல்லி : தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
ஒருநாள் போட்டிகளில் என்னைவிட சுப்மன் கில் சிறப்பாக விளையாடுகிறார்: ஷிகர் தவான்
26 Mar 2023புதுடெல்லி : இந்திய அணியின் தேர்வாளராக தான் இருந்தால் ஒருநாள் அணியில் தன்னைக் காட்டிலும் சுப்மன் கில்லைதான் தேர்வு செய்வேன் என இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்
-
கால்பந்து உலகில் பிரேசிலுக்கு எதிராக முதல் வெற்றி : அசாத்திய அணியை அப்செட் செய்த மொராக்கோ
26 Mar 2023டேன்ஜர் : கால்பந்து விளையாட்டு உலகின் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ.
-
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு : ஏப். 1 முதல் நடைமுறைக்கு வருகிறது
26 Mar 2023புதுடெல்லி : 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஏப்ரல
-
திருத்தணி முருகன் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்
26 Mar 2023திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி: தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்த ராகுல்காந்தி
26 Mar 2023புதுடெல்லி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்துள்ளார்.
-
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
26 Mar 2023ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை : சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்
26 Mar 2023சென்னை : தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
-
நியூயார்க்கில் புகழ்பெற்ற பிளாடிரான் கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு ஏலம்
26 Mar 2023நியூயார்க் : நியூயார்க்கில் புகழ் பெற்ற 22 மாடிகளை கொண்ட பிளாடிரான் கட்டிடம் ரூ. 1,564 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
-
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
26 Mar 2023ஸ்ரீஹரிகோட்டா : எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: எல்.முருகன்
26 Mar 2023மதுரை : இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
-
ஏப்ரல் மாத ரூ. 300 தரிசன டிக்கெட் இன்று வெளியீடு : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
26 Mar 2023திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
‘ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் எனது பங்களிப்பு இருக்கும்’ - பயிற்சியாளராகும் விருப்பத்தை தெரிவித்த டிம் பெய்ன்
26 Mar 2023புதுடெல்லி : ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தனது பங்களிப்பு இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னள் வீரர் டிம் பெய்ன் தனது பயிற்சியாளராகும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
-
கீழடி அருங்காட்சியகத்தை காண ஏப். 1-ம் தேதி முதல் கட்டணம்
26 Mar 2023சிவகங்கை : கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.