எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, July 14, 2025 to Sunday, July 20, 2025
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். காரியத் தடைகள், சுறுசுறுப்பு இல்லாத நிலை உருவாகும். பக்தி, ஞானம் மேலிடும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் தங்கள் புகழும் மரியாதையும் கூடும். பயணத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர் அனுசரணை இருக்கும். அரசு வகை இலாபங்கள் ஏற்படும். விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்பட்டு, வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம், புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மன அமைதி பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நறுமணப் பொருட்கள் மற்றும் நவநாகரீக வீட்டு உபயோகப் பொருட்கள் வியாபாரம் சூடுபிடிக்கும்.
பரணி -- இந்த வாரம் உங்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. சிலருக்குப் தொழிலில் பண முடக்கம் ஏற்படலாம். பட்டம், பதவிகள் ஆகியவை கிடைக்கும். தாயின் மூலம் இலாபம் ஏற்படலாம். கற்பனை வளம் பெருகும். போட்டி பந்தயங்கள் அரசு வகை இலாபம், வீட்டில் சுபகாரியங்கள், வெளியிடங்களில் வெற்றிக்கான பாராட்டுக்கள் ஆகியவை ஏற்படும். தம்பதிகளுக்கு இடையே அன்பு மிகுந்து ஒருவருக்கொருவர் அனுசரித்துப் பேரின்பம் அடைவர். தீயகுணமுடைய நண்பர்களை ஒதுக்குவது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் தொலைதூர சுபச் செய்திகள் கேட்டு மனம் மகிழும். பலரும் வியக்கும் வண்ணம் பற்பல சாதனைகளைப் புரிந்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு முன்னேற்றத்துக்கான வழிகள் பிறக்கும். அரசு வகையில் கட்ட வேண்டிய வரி பாக்கிகள் செலுத்துவதற்கு தேவையான பணவரவுகள், பணவுதவி கள் வந்து சேரும். தரும காரியங்கள் மற்றும் தெய்வ வழிபாடு ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்த்து முன்னேற்றம் அடைய முற்படுவது நல்லது. மனதுக்குப் பிரியமான மனைவியிடம் அன்பு பாராட்டி, அமைதியாக இருந்தால் ஆனந்தம் பெருகும்.
ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசீரிஷம்-1,2 பாதங்கள்)
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. வெளியூர் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஞானிகளின், பெரியவர்கள் சந்திப்பால் மன அமைதியும், சந்தோஷமும் பெருகும். சிலருக்கு எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாக வும் இருக்கும். தங்கள் கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சிலருக்கு வீடு, தொழில் அல்லது இடமாற்றம் ஏற்படலாம்.
ரோகிணி – இந்த வாரம் தனலாபம் எதிர்பார்க்கலாம். பிறரின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை எழலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை ஒரு சில நாட்களுக்குத் தள்ளிப் போடுவது நல்லது. அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படலாம். தூய ஆடைகளை அணிந்து மிடுக்காக, நல்ல காரியங்கள் செய்து நல்லவர் என அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவர். சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலம் வேண்டாத பகையை தேடிக் கொள்வார். அரசு மூலம் எதிர்பார்த்த ஆதாயங்கள் எளிதாகக் கிடைக்கும். கேளிக்கை ஈடுபாடு, இனியது புசித்தல் மற்றும் ஸ்த்ரீ சுகம் என பொழுது இனிமையாக கழியும். சிலருக்குத் தொடர் பணியின் காரணமாக வேளாவேளைக்கு உணவருந்தாமல் நிலை ஏற்படும்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு பெரியவர்கள் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவு, புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படிப்பது காரணமாக அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். சிலருக்கு வாழ்க்கையில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படலாம். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாக பல வழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல ஆன்மிக குரு வாய்க்கப்பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படுத்துவார். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் உங்கள் அசாத்தியத் திறமைகளை வெளிக் காட்டுவதன் மூலம் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நல்ல சேதிகள் நாடிவரும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். வாரத்தின், முதல் நாள் பயணத்தில் துன்பமும், பின்னர் வரும் நாட்களில் கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே இன்பம் வரும் போது மகிழ்ச்சியில் பொங்குவதும், துன்பம் வரும் போது துவளுவது தானே வாழ்க்கை. இரண்டையும் சமமாக பாவித்தல் துன்பமும் இன்பமாகும்.
திருவாதிரை --- இந்த வாரம் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். அதன் காரணமாக அதிகம் உழைப்பீர்கள். அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ஓங்கும். அறிவுத் திறனும் கூடும். சிலர் பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இனிய புதிய நண்பர்களிடம் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு பிரிவும், பகையும் ஏற்படலாம். தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதன் வருவாய் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகன யோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் உங்களுக்கு தந்தையால் நன்மைகள் பல ஏற்படும். மகான்களின் தரிசனம் கிட்டும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் போது அது விஷயமாக பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். பெண்களுக்கு வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது.
கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம். அதன் காரணமாக வங்கி சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் கையிருப்பு பணம் அதிகரிக்கும். பங்குச் சந்தை ஈடுபாடு இலாபம் பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவும், புதிய தொடர்புகள் நன்மையும் ஏற்படும்.
அஸ்தம் – இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். மந்திர சித்தி செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். பெரிய மனிதர்களின் மற்றும் பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். தன வருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக இருக்கும். கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப்பெரிய சாகசங்களை புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். குழந்தைகளின் செயல்கள், சில நேரங்களில் அவமானப்படும் நிலை ஏற்படும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். உங்கள் பணி கண்டு மற்றவர்களின் பாராட்டை கேட்டு மகிழ்வார்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்பு தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்வர். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் தங்கள் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். பக்தி மிக்க புண்ணிய தல யாத்திரைகள் ஏற்படும். மேம்படும் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடுவதால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பூமி, வீடு ஆகியவற்றின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ந்த வாகன வசதி ஏற்படலாம். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
திருவோணம்- இந்த வாரம் உங்கள் மூலதனத்தைக் கொண்டு புதிய முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்த முற்படுவீர்கள். நீண்ட நாட்களாக வருவார்கள் என எதிர்பார்த்த நெருங்கிய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்கள் திறமைகளை நிலைநாட்டி புகழ் பெறுவர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் தாராளமான தன வரவு வரும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். உயர் அதிகாரிகளின் சொல் கேட்டு நடப்பது முன்னேற்றத்தை அளிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசுகள் கொடுத்து நீங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைந்து மகிழ்வர். எதிரிகளின் திட்டங்களை சமயோஜிதமாக செயல்பட்டு முறியடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும். புத்திரர்களால் ஜெயமுண்டு. நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகள் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் எதிர்பாராத இனிய விருந்துகள், மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்படும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். அரசாங்கத்திடம் வேண்டப்பட்ட கோரிக்கைகள் தடங்கலின்றி நிறைவேறும். நல்லோர் சேர்க்கையால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி ஏற்படும். சிலருக்கு உழைப்புக் குறைவானாலும் ஆதாயம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் சிலர் மேன்மை அடைவீர்கள். எப்போதாவது வரும் கோபத்தை அடக்குவது நல்லது. சிலருக்குத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும்.
பூசம் -- இந்த வாரம் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு செலவுகள் ஏற்படும். புதுப்புது முயற்சிகளால் செல்வ நிலை உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளரிடம் மிகுந்த நட்பு பாராட்டி அதிக இலாபம் சம்பாதிப்பது. அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். துணிவுடன் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சிலருக்கு அவ்வப்போது சிறு காரியத் தடைகள் ஏற்படலாம். தூக்கமின்மையால், சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். சில மாணவர்கள் கல்வியில் உயர்நிலை எய்துவர். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
ஆயில்யம் – இந்த வாரம் மனைவியின் அன்பால் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். பெரியோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அதன் காரணமாக உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டுக்குத் தேவை என்று விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் தொடங்க அரசுக் கடன்கள் தடையின்றி கிடைக்கும். புத்தக அச்சு மற்றும் வெளியீடு சம்பந்தமான தொழில்கள் வங்கிக் கடன் உதவியுடன் வெற்றி பெறும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும்.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் இரண்டும் கலந்த வாரம். ஞானிகளின் உபதேசம் கேட்டு மனம் ஞானத் தன்மைக்கு மாறும். அரசுப் பெண் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீண் கோபத்தால் விவேகத்தை இழக்காதீர்கள். தங்கள் சிறப்பான, திறமை மிக்க பணி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் பெறும். மேடைப் பேச்சாளர்களுக்கு மேன்மையான நிலை ஏற்படும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
பூரம் – இந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்த்த அளவு தனவரவு உண்டு. உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்படும். தெய்வ சிந்தனையாலும், தரும சிந்தனையாலும் மனதில் அமைதி நிலவும். தொழில் வாய்ப்புகள் பெருகும். உடன் பணிபுரியும் பணியாளர்களின் பொறுப்பு மிக்க பணியால் உற்பத்தி பெருகும். பங்குச் சந்தை மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஏற்றமிகு வாரம். சிலருக்குப் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் முதல் நாளும், 4, 5 மற்றும் 6 நாட்களும் உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். எதிர்பாராத தனவரவு மனம் மகிழும். ஆறுவது சினம் என சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். போட்டி, பொறாமைகளை அகற்றி தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் முன்னேற்றங்கள் சுலபமாகும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். சிலர் பழைய கடன்களை அடைத்து புதிய கடன்கள் வாங்க முயல்வீர்கள். உயர் அதிகாரிகளின் உந்துதலால் ஏற்படும், இடைவிடாத பணி காரணமாக நேரத்திற்கு உணவு உண்ண இயலாமல் போகும். புதிய வியாபாரத் திட்டங்கள் வெற்றி பெறுவதோடு, நல்ல காலம் கனிந்து வரும். அரசு அதிகாரிகள் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரனின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த இலக்கை எட்டிவிடுவீர்கள்.
சுவாதி – இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பெண்களுக்கு பணியிடத்தில் மற்றவர்களின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் செலவுகள் அதிகமாகும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பு எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்களிடம் பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பை தவிர்க்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல உயர்வான முன்னேற்றங்கள் ஏற்படும்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் குடும்பத்தில் கலகங்களும், குழப்பங்களும் நிகழலாம். ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதில்லையே. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. பல நாள் கனவுகள் நனவாகும். பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஆடம்பர செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்குப் பிறர் பொல்லாப்பு காரணமாக பயம் தோன்றலாம். தெய்வபலம் இருப்பதால் நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சி தனை அனுபவிப்பீர்கள்.
உத்திரட்டாதி- இந்த வாரம் கல்வி கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். சுபச் செய்திகள் மனமகிழ்ச்சி தரும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்கள் ஈடுபாடு ஏற்படும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களால் அதிக இலாபம் அடைவர். பெண்கள்! தங்கள் இல்லத்தில் மிக மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். மாணவர்கள் கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பெண்களால் சந்தோஷம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீய குணமுள்ள நண்பர்களைத் தவிர்க்கவும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும்.
ரேவதி- இந்த வாரம் உறவுகள், உள்ளங்கவர் நண்பர்கள் மற்றும் மங்கையர்கள் ஆகியோர் உதவிக்கரம் நீட்டுவதால் உள்ளம் மகிழும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மால் போன்ற இடங்களில் மனதுக்கு இனிய அவர்களுடன் சுற்றி, உணவகத்தில் இனியதாய் புசிப்பீர்கள். சிலருக்குப் பொருள் சேதமும், புதிய கடன்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் அடங்கி நடப்பது நல்லது. பெரியவர்கள் பேட்டியும், ஞானிகள் தரிசனம் கிடைக்கும். பல சாதனைகள் புரிவார்கள். பிறருடன் வீண் மனஸ்தாபங்கள் தவிர்கவும். வியாபார விரிவாக்கம் பற்றி தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும், சிறப்பானதாகவும் இருக்கும்.
தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.
பூராடம் – இந்த வாரம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். ஆனால், தொழில் விஷயமாக எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். அரசு பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் பல வழிகளிலும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தங்கள் அனுசரணையால் சீர்படும். சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். அன்பான உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், அதிகச் செலவுகளும் ஏற்படும். உங்கள் சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் சுக சௌகரியங்கள் சேரும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்
அனுஷம் – இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் உதவிகள் தடைப்படாது. உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பை தவிர்க்கும் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.
கேட்டை – இந்த வாரம் உங்களுக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. உங்கள் செயல்திறன் அதிகரிகரித்துச் செல்வாக்கும் பெருகும். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரமுள்ள உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பயணங்களிலும் எச்சரிக்கை தேவை.
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் உங்கள் பணவரவு அதிகரிக்கும். புதிய முதலீட்டுத் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழிலை விருத்தி செய்வார்கள். விருந்தினர்கள் வருவர். விருந்தாடி மகிழ்வைத் தருவர்.. நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். பயணங்கள் இனிமை தரும். சினிமா, டிராமா எனப் பொழுதுபோக்குகளில் குடும்பத்தோடு ஈடுபட்டு மகிழ்வீர்கள். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும்.
சதயம்- இந்த வாரம் குடும்பத்தோடு குதூகலமாக இருக்கப் போகும் குஷியான வாரம். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் தொல்லை குறையும். அரசு பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் தயவால் பணியில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்களு தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மனக்களிப்பு கூடும் வாரம். உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். எல்லோருடனும் பழகும் உங்கள் சகஜமான குணத்தால் விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலையும் ஏற்படும். சந்தோஷங்கள் நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். தொடுத்த வழக்குகள் வெல்லும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் பெருகும். தாய் வழியில் ஆதாயம் உண்டு. பால் வளம் பெருகும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலை பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி