எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம், ஏப். - 8 - திருமங்கலம் பகுதிகளுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், அவனியாபுரம், திருமங்கலம், திருநகர், விளாங்குடி, அ. வெள்ளாளபட்டி, அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1430 ஊரக குடியிருப்பகங்களில் வசித்திடும் மக்கள் பயன் பெற்றிடும் வகையில் ரூ. 784 கோடி செலவில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக கருர் மாவட்டம் காவிரி ஆற்றில் 3 நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் நகராட்சிக்கு நாளொன்றுக்கு 4.5 மில்லியன் லிட்டர் கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழா நேற்று பூமி பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கலெக்டர் சகாயம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இதையடுத்து இந்த பணிகளுக்காக திருமங்கலம் சந்தை பேட்டை பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி அமைத்திட ராட்சத எந்திரம் கொண்டு கிணறு தோண்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் சாமி, தமிழரசன், கருப்பையா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், திருமங்கலம் தொகுதி செயலாளர் ஆண்டிசாமி, நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன், துணை சேர்மன் பசுபதி ஆண்டிச்சாமி, திருமங்கலம் நகர்மன்ற தலைவர் உமாவிஜயன், துணை தலைவர் சதீஷ்சண்முகம், கள்ளிக்குடி யூனியன் சேர்மன் உலகாணி மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், நகராட்சி ஆணையர் முகமது சிராஜ், யூனியன் ஆணையர் ராஜம்மாள், மாவட்ட கவுன்சிலர்கள் பிரபுசங்கர், அன்னலெட்சுமி, திருப்பரங்குன்றம் நகர செயலாளர் பன்னீர் செல்வம், திருமங்கலம் நகர அவை தலைவர் ஜஹாங்கீர், துணை செயலாளர் ராஜாமணி, பொருளாளர் துரைபாண்டி, ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, முருகேசன், மேலூர் நகர்மன்ற தலைவர் சரவணன், மாவட்ட பிரதிநிதி கலைசெல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ரூ. 784 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இரண்டு ஆண்டுகளில் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தின் மூலம் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசித்திடும் மக்களுக்கு இனி குடிநீர் பஞ்சம் இல்லை என்ற சூழல் உருவாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
----
புட்நோட்
1. திருமங்கலத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். அருகில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் சகாயம் மற்றும் எம்.எல்.ஏக்கள் சாமி, தமிழரசன், கருப்பையா ஆகியோர் உள்ளனர்.
2. திருமங்கலம் பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட பூமி பூஜையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மாவட்ட கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏக்கள் முத்துராமலிங்கம், சாமி, தமிழரசன், கருப்பையா மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
3. திருமங்கலம்பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏக்கள் முத்துராமலிங்கம், சாமி, தமிழரசன், கருப்பையா மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.