முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.13 - ராமநாதபுரம் ராமேஸ்வரம் வட்டம் அரியமான் கடற்கரையில் படகு விபத்தில் உயிரிழந்த மீனவர் கால்வின்மில்லர் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்ததுடன் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டம், பாம்பன் கிராமத்தைச் சேர்ந்த பெளனிராஜ் என்பவரின் மகன் கால்வின் மில்லர் 10.5.2012 அன்று இரவு ராமேஸ்வரம் அரியமான் கடற்கரையிலிருந்து நான்கு கடல் மைல் தொலைவில் நாட்டுப் படகில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட படகு விபத்தில் nullநீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இவ்விபத்தில் அகால மரணமடைந்த மீனவர் கால்வின் மில்லர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்துயரச் சம்பவத்தில் காலமான கால்வின் மில்லர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்