முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு படத் தயாரிப்பாளர் மீது கஸ்தூரி ராஜா குற்றசாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.13 - நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டி வருகிறார் என தெலுங்கு படத் தயாரிப்பாளர் நட்டிகுமார் மீது தனுஷ் அப்பாவும், திரைப்பட இயக்குனருமான கஸ்தூரி ராஜா பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

சமீபத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் திரைக்கு வந்த படம் ா3ா இந்த படத்தை கஸ்தூரி ராஜா தயாரித்து இருந்தார். இந்தப் படத்தின் தெலுங்கு உரிமையை நட்டிக்குமார் என்பவர் வாங்கியிருந்தார். இதில், பிரச்சனை ஏற்பட்டிருந்தது. அதனால், தனுஷ், ஐஸ்வர்யா, மற்றும் ரஜினி மீது மீடியாக்களில் நட்டிக்குமார் புகார் கூறி வந்தார். 

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கஸ்தூரி ராஜா சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தனுஷ் நடித்த 3 படத்தை நான் தயாரித்தேன். தெலுங்கில் நட்டிக்குமார் என்பவர் 4 கோடியே 35 லட்சத்திற்கு வாங்கினார். அதோடு இதன் ஆடியோ உரிமையை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சோனி நிறுவனம் வாங்கியது. அந்த நிறுவனத்திற்குதான் நாங்கள் சட்டப்படி விற்று உள்ளோம். இதன் இசை வெளியீட்டுக்கு நட்டிக்குமார் வந்திருந்தார். இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகிய போது ஒரு புது அக்ரிமெண்டில் கையெழுத்து போடச் சொன்னார் நட்டிக்குமார்.

நானும் அதை சரியாக கவனிக்காமல் கையெழுத்துப் போட்டுவிட்டேன் என்பது பிறகு தான் தெரிந்தது. 

அந்த ஒப்பந்தம் தவறானது என்பது புரிந்தது.  இதைவைத்துக்கொண்டு தெலுங்கு மீடியாக்களில் தனுஷ், ஐஸ்வர்யா, மற்றும் ரஜினி மீது நட்டிக்குமார் தவறான செய்திகளை பரப்பி வருகிறார். சட்டப்படி படத் தயாரிப்பாளர் நான். என் மீது தான் அவர் குற்றம் சொல்வதாக இருந்தால் சொல்ல வேண்டும்.

தனுஷ் நடித்தவர், ஐஸ்வர்யா படத்தை இயக்கியவர். ரஜினிக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. விளம்பரத்துக்காக மேற்கண்டவர்களை நட்டிக்குமார் பயன்படுத்தி வருகிறார்.

மேலும், நட்டிக்குமார் ஒப்பந்தபடி பேசிய 4 கோடியே 35 லட்சம் பணத்தை சரியாக தரவில்லை. இன்னும் 1 கோடியே 35 லட்சம் தரவேண்டும். எங்கள் அனுமதி இல்லாமல் சேட்லைட் உரிமை விற்று இருக்கிறார். ஆடியோ விற்பனையில் அவருக்கு துளியும் உரிமை கிடையாது.சோனி நிறுவனத்துக்குத்தான் அந்த உரிமை உண்டு. நட்டிகுமார் அளவுக்கு நானும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போக முடியாது. அவர் ஏமாற்றியதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இனி நானும் சட்டபடி நட்டிக்குமாரை 

சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்