முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரி படுகொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.13 -​ சென்னை துறைமுக அதிகாரி மதுரவாயலிருந்து கடத்திச் செல்லப்பட்டு திருவண்ணாமலை அருகே எரித்து கொன்ற சம்பத்தில், ஏற்கனவே ஒருவர் கைது செய்ய்பட்டிருதார். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளர். இது குறித்து விபரம் வருமாறு:-

மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் டெல்லிபாபு. துறைமுகத்தில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 6​ந் தேதி இரவு வீட்டு அருகே காரை பார்க்கிங் செய்ய சென்ற டெல்லிபாபு மாயமானார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் உறவினர்கள் மதுரவாயல் போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த செங்கம் கிராமம் மோரை குறிச்சியில் உள்ள சுடுகாட்டில் டெல்லிபாபு எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை சகோதரர் வாஞ்சிநாதன் அடையாளம் காட்டினார். மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதுரவாயலை சேர்ந்த கார்மேகம் சிக்கினார். இவரை திருவண்ணாமலையில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தபோது பிடித்தனர்.

விசாரணையில் டெல்லி பாபுவிடம் அவரது சித்தப்பா மகன் கோகுல் அடிக்கடி பணம் வாங்கி செலவழித்தார். இந்த பணத்தை கோகுலிடம் திருப்பி கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. கோகுலிடம் பணத்தை திருப்பி தருமாறு டெல்லிபாபு திட்டினார். ஆத்திரம் அடைந்த கோகுல் தனது நண்பர் கார்மேகத்திடம், டெல்லிபாபுவின் தொல்லை தாங்க முடியவில்லை. அவரை மிரட்ட வேண்டும் என்று கூறினார்.

கடந்த 6​ந் தேதி திருவள்ளூரில் நடந்த உறவினர் திருமணத்துக்கு காரில் டெல்லிபாபு குடும்பத்துடன் சென்றார். கோகுலும் உடன் சென்றார். இரவு அவர்கள் மதுரவாயலுக்கு காரில் திரும்பினர். அப்போது காரை பார்க்கிங் செய்ய டெல்லிபாபு தனியாக செல்வதை கோகுல் கார்மேகத்துக்கு செல்போனில் தெரிவித்தார்.

கார்மேகம், நண்பர்கள் ராஜ்குமார், nullபாலன், சுந்தர் ஆகியோர் டெல்லிபாபுவை இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டி சரமாரியாக தாக்கினார்கள். அவர் சத்தம் போட்டதால் கயிற்றால் கழுத்தை இறுக்கினர். இதில் டெல்லிபாபு இறந்தார். பயந்துபோன அவர்கள் டெல்லிபாபு உடலை அவரது காரிலேயே ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றனர். வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் வாங்கி கொண்டு செங்கம் அருகே சுடுகாட்டில் உடலை எரித்துவிட்டு ஓடிவிட்டனர்.

மதுரவாயலில் இருந்த கோகுலை போலீசார் கைது செய்தனர். ராஜ்குமார், nullபாலன் சுந்தர் ஆகிய 3 பேரை தேடிவந்தனர். இதில் மதுரவாயல் ஓடமா நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ராஜ்குமார், சுந்தர் போலீசாரிடம் சிக்கினர். தலைமறைவாக உள்ள nullபாலனை தேடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்