முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா அரை இறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 3 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பேட் மிண்டனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனையான சாய்னா நெக்வால் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதி ச் சுற்றுக்கு முன்னறி இருக்கிறார். 

இதன் மூலம் அவர் பதக்கம் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சாய்னா சிறப்பாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் கா லிறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங் கனையான சாய்னாவும், டென்மார்க் வீராங்கனையும் மோதினர். 

இந்தப் போட்டியில் சாய்னா சிறப்பா  ன ஆட்டத்தை வெளிப்படுத்தி டென் மார்க் வீராங்கனையை திணற வைத் தார். இறுதியில் எளிதான வெற்றியைப் பெற்றார். 

இந்தப் போட்டியில் சாய்னா நெக்வா ல் 21- 15, 22 - 20 என்ற நேர் செட் கணக் கில் டென்மார்க் வீராங்கனை டைனி பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இந்த ஆட்டத்தின் முதல் கேமில் சாய் னா துவக்கம் முதல் சிறப்பாக ஆடி முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இந்த கேமை அவர் 21- 15 என்ற கணக் கில் கைப்பற்றினார். 

பின்பு நடந்த 2-வது கேமில் டென்மார் க் வீராங்கனை கடைசி வரை போராடி னார். சாய்னா அவரது சவாலை முறிய டித்து 22- 20 என்ற கணக்கில் வென்றார். 

இந்தப் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் ஒலிம்பிக் பேட் மிண்டனில் ஒற்றையர் அரை இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை சாய்னாவுக்கு கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்