எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஆக.7 - அமெரிக்க விஞ்ஞானிகளால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடியாக வேறு கிரகங்களில் உயிரினம் உள்ளதா என்ற கேள்வி உலக விஞ்ஞானிகள் இடையே இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு விடை காண அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே இரண்டு ரோபோ விண்கலங்களை அமெரிக்கா ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அந்த விண்கலங்கள் மேற்கொண்ட சோதனையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும் அது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கியூரியாசிட்டி என்ற அதி நவீன விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் 8 மாத கால விண்வெளி பயணத்திற்கு பிறகு நேற்று செவ்வாய்க்கிரகத்தில் பத்திரமாகவும் வெற்றிகரமாகவும் தரையிறங்கியது.
இந்த அபார வெற்றியை நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்தும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த கியூரியாசிட்டி விண்கலம் இந்திய நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது.
கடந்த 30 ஆண்டுகால விண்வெளி ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் இது விண்வெளி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் கூறினர்.
மணிக்கு 21,250 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த இந்த விண்கலம் செவ்வாய் கிரக பகுதியை நெருங்கியதும் பாராசூட் மூலம் மெதுவாக தரையிறங்கியது. அப்போது அந்த விண்கலத்தின் 6 சக்கரங்களும் தரை பரப்பில் பதிந்து ஊர்ந்து சென்றது.
ஒரு குட்டி காரை போல 1000 கிலோ எடையில் ( 1 டன்) உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்திற்கு ரூ. 250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
ஓ கடவுளே செவ்வாய் கிரகத்தில் கால் பதித்து விட்டோம் என்று இந்த காட்சியை பார்த்து அசந்து போன விஞ்ஞானி ஒருவர் ஆர்ப்பரித்தார்.
இந்த விண்கலத்தின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமிரா மூலம் இந்த விண்கலம் செவ்வாயில் கால் பதித்ததையும் அதன் சக்கரங்களும் உடனடியாக படம் எடுக்கப்ப்டடு பூமிக்கு அனுப்பப்பட்டன.
செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பு உயிரினங்கள் ஏதேனும் வாழ்ந்துள்ளனவா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சி சாதனங்கள் இந்த விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முதல் படம் பெறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் இந்த விண்கலத்தின் நிழல் செவ்வாயின் தரையில் விழுந்த படம் பெறப்பட்டது.
இந்த வெற்றி அமெரிக்காவின் ஒற்றை பெருமிதத்திற்கு உரியது என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வர்ணித்துள்ளார்.
இதுவரை இப்படி ஒரு அதி நவீன விகலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில்லை. அப்படிப்பட்ட விண்கலத்தை அனுப்பிய பெருமை அமெரிக்காவுக்கே உண்டு என்று ஒபாமா பெருமிதத்துடன் கூறினார்.
இந்த விண்கலம் பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே உள்ள 25 கோடி கி.மீ. தூரத்தை எட்டே மாதங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் இது மகத்தானது.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் இதுவே மிகப்பெரியது.
இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தை பற்றிய நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொல்ளும். இது அனுப்ப இருக்கும் தகவல்களும் படங்களும் வீடியோக்களும் மனித குலத்திற்கு பல புதிய தகவல்களை கொடுக்கும்.
கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 வகையான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு இக்கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஸ்ரிட், ஆப்பர்ச்சூனிட்டி ஆகிய விண்கலங்களில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை விட இவை 15 மடங்கு அதி நவீன தொழில்நுட்பம் கொண்டவை ஆகும்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை பகுதிகளின் வேதி தன்மைகளை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ஆய்வு செய்யும் அதி நவீன லேசர் கருவிகளும் கியூரியாசிட்டி விண்கலத்தில் உள்ளன.
செவ்வாய் கிரகத்தின் மண்ணை அள்ளி எடுத்து சோதனை செய்யும் நவீன ரோபோக்களும் இதில் உள்ளன.
மேலும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளுக்கு இந்த விண்கல பயணம் ஒரு முன்னோட்டமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


