எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஆக.7 - அமெரிக்க விஞ்ஞானிகளால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடியாக வேறு கிரகங்களில் உயிரினம் உள்ளதா என்ற கேள்வி உலக விஞ்ஞானிகள் இடையே இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு விடை காண அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே இரண்டு ரோபோ விண்கலங்களை அமெரிக்கா ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அந்த விண்கலங்கள் மேற்கொண்ட சோதனையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும் அது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கியூரியாசிட்டி என்ற அதி நவீன விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் 8 மாத கால விண்வெளி பயணத்திற்கு பிறகு நேற்று செவ்வாய்க்கிரகத்தில் பத்திரமாகவும் வெற்றிகரமாகவும் தரையிறங்கியது.
இந்த அபார வெற்றியை நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்தும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த கியூரியாசிட்டி விண்கலம் இந்திய நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது.
கடந்த 30 ஆண்டுகால விண்வெளி ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் இது விண்வெளி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் கூறினர்.
மணிக்கு 21,250 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த இந்த விண்கலம் செவ்வாய் கிரக பகுதியை நெருங்கியதும் பாராசூட் மூலம் மெதுவாக தரையிறங்கியது. அப்போது அந்த விண்கலத்தின் 6 சக்கரங்களும் தரை பரப்பில் பதிந்து ஊர்ந்து சென்றது.
ஒரு குட்டி காரை போல 1000 கிலோ எடையில் ( 1 டன்) உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்திற்கு ரூ. 250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
ஓ கடவுளே செவ்வாய் கிரகத்தில் கால் பதித்து விட்டோம் என்று இந்த காட்சியை பார்த்து அசந்து போன விஞ்ஞானி ஒருவர் ஆர்ப்பரித்தார்.
இந்த விண்கலத்தின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமிரா மூலம் இந்த விண்கலம் செவ்வாயில் கால் பதித்ததையும் அதன் சக்கரங்களும் உடனடியாக படம் எடுக்கப்ப்டடு பூமிக்கு அனுப்பப்பட்டன.
செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பு உயிரினங்கள் ஏதேனும் வாழ்ந்துள்ளனவா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சி சாதனங்கள் இந்த விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முதல் படம் பெறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் இந்த விண்கலத்தின் நிழல் செவ்வாயின் தரையில் விழுந்த படம் பெறப்பட்டது.
இந்த வெற்றி அமெரிக்காவின் ஒற்றை பெருமிதத்திற்கு உரியது என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வர்ணித்துள்ளார்.
இதுவரை இப்படி ஒரு அதி நவீன விகலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில்லை. அப்படிப்பட்ட விண்கலத்தை அனுப்பிய பெருமை அமெரிக்காவுக்கே உண்டு என்று ஒபாமா பெருமிதத்துடன் கூறினார்.
இந்த விண்கலம் பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே உள்ள 25 கோடி கி.மீ. தூரத்தை எட்டே மாதங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் இது மகத்தானது.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் இதுவே மிகப்பெரியது.
இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தை பற்றிய நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொல்ளும். இது அனுப்ப இருக்கும் தகவல்களும் படங்களும் வீடியோக்களும் மனித குலத்திற்கு பல புதிய தகவல்களை கொடுக்கும்.
கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 வகையான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு இக்கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஸ்ரிட், ஆப்பர்ச்சூனிட்டி ஆகிய விண்கலங்களில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்களை விட இவை 15 மடங்கு அதி நவீன தொழில்நுட்பம் கொண்டவை ஆகும்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை பகுதிகளின் வேதி தன்மைகளை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து ஆய்வு செய்யும் அதி நவீன லேசர் கருவிகளும் கியூரியாசிட்டி விண்கலத்தில் உள்ளன.
செவ்வாய் கிரகத்தின் மண்ணை அள்ளி எடுத்து சோதனை செய்யும் நவீன ரோபோக்களும் இதில் உள்ளன.
மேலும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளுக்கு இந்த விண்கல பயணம் ஒரு முன்னோட்டமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஊழல், மோசடிகளை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
16 Nov 2025சென்னை : ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என்றும், தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-11-2025.
16 Nov 2025 -
பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
16 Nov 2025பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?
16 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
நமது தேசத்தை பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
16 Nov 2025லக்னோ : நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்
16 Nov 2025சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது
16 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்களிடம் 7-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
16 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
16 Nov 2025சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


