முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய ஒளி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த கலாம் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம்,ஏப்.18 - மின்தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் யோசனை தெரிவித்தார். மேல்மருத்தூர் அடிகளார் திருமண மண்டபத்தில் மாணவர்கள் கலந்துரையாடல் விழா நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது; மாணவர்கள் நல்ல ஒழுக்கத்துடன் சிறந்த மாணவர்களாக திகழவேண்டும். 54 கோடி இளைஞர்களை கொண்ட ஒரே நாடு நம் இந்தியா மாணவர்கள் எண்ணத்தில் நல்லொழுக்கம் இருந்தால் குடும்பத்தில் அழகு மிளரும் இதனால் நாட்டில் சீர்முறையும், உலகத்தில் அமைதியும், சாந்தமும் நிலவும் இவ்வாறு அவர் கூறினார். பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அப்துல்கலாம் பதில் அளித்தார். விவசாய நிலங்கள் மனைகளாகவும்,தொழில் நகரங்களாகவும் மாற்றப்படுகிறதே? என்று ஒரு மாணவர் கேட்டார். அதற்கு அப்துல்காலம் பதில் அளிக்கையில், இந்தியாவில் கிராமங்களில் இடைவெளி குறைந்து 6,500 கிராமங்கள் நகரமாக வளர்ந்துள்ளது. வரும் 2020 -ம் ஆண்டு நமக்கு 40 கோடி டன் உணவு இருப்பு தேவைப்படுகிறது. அதற்காக  நாம் உயர் ரக விதைகள் மூலம் உற்பத்தியை பெருக்கி, உயர்ந்த தொழில் நுட்பம் மற்றும் நவீன முறையிலான தானிய கிடங்களை பல மடங்கு உயர்த்த வேண்டும் என்றார். மற்றொரு மாணவி, உங்களின் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா? என கேட்டதற்கு, இந்தியாவிலுள்ள 100 கோடி மக்களின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றார். மின்சார தட்டுப்பாடு ஏற்பட காரணமும் அதனை சரிசெய்ய எந்த வகையான நடைமுறையை மேற்கொள்ளலாம் என ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்