எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 23 - கருணாநிதி கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கேரள, தமிழக தேர்தல் களம் குறித்து மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் கட்சியின் ஆங்கிர வார ஏடான பீப்பிள் டெமாக்ரசியில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இதன் தமிழாக்கம் ஒரு நாளேட்டில் வெளியிடப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பார்த்தும் மறந்தாரே காரத்! என்ற தலைப்பில் ஒரு நாளேட்டில் கருணாநிதி பதில் ஒன்றை எழுதியுள்ளார்.
கம்யூனிட் இயக்கத் தலைவர்கள் மீது வருத்தம், கோபம் ஏற்பட்டாலும் அதை வெளிப்படுத்தும்போது அன்பையும், பழைய நட்பைபும் என்றைக்கும் நான் மறந்தவன் அல்ல என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிட் கட்சியை நான்தான் வளராமல் பார்த்துக்கொண்டேன் என்ற கூற்றும், புனைப் பெயர்களில் ஒரு நாளேட்டில் வந்த கவிதைகளும் அன்பின்பாற்பட்ட நாகரீகமான வெளிப்பாடு தானா என்பதை விளக்கும் கடமை அவருக்கு உண்டு.
ராமகிருஷ்ணன்கள் நரகல் நடையில் திமுகவை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியைப் பொறுத்தவரை, அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் எடுக்கப்படும் அரசியல் நிலைபாட்டின் அடிப்படையில்தான் விமர்சனங்களை அது முன்வைக்குமே தவிர, தவறுகளை சுட்டிக்காட்டுமே தவிர, குற்றங்களை இடித்துரைக்குமே தவிர, நரகல் நடை, நாராச மொழி மார்க்சிட் கட்சித் தலைவர்கள் அறியாத ஒன்று.
கம்யூனிசம் என்ற கொள்கை தம்மை இயக்கிக் கொண்டிருக்கிற குன்றாத குருதியோட்டமாகத் திகழ்வதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிட் பற்று என்பது வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுவதல்ல, செயல்பாட்டிலும், நடைமுறையிலும் அதன் தாக்கம் இருக்க வேண்டும். பன்னாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆலைகளில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள குறைந்தபட்ச உரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக்கூட மறுக்கும்போது திமுக அரசு யார் பக்கம் நின்றது என்பதிலிருந்தே.தி.மு.க.வின் சார்பு நிலை தீர்மானிக்கப்படும்.
தொழிற்சங்க உரிமகளை மறுத்ததற்காக பன்னாட்டு நிறுவனங்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. அதை வலியுறுத்திய தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கைவிலங்கு nullட்டியது, தொழிலாளர், சத்துணவு ஊழியர், அரசு ஊழியர், மாணவர்கள் போராட்டங்களின்போது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது போன்றவற்றை பார்க்கும்போது முதல்வர் சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கு அது வலுச்சேர்ப்பதாக இல்லை.
அணு ஒப்பந்தம் போன்ற கருத்துக்களை மணிக்கணக்கில் பிரகாஷ்காரத்துடன் உரையாடி விவாதித்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கையெழுத்திடக்கூடாது என்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. போன்ற கட்சிகள் இதற்காக காங்கிரஸ் கட்சியை வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிட் கட்சி அத்தகைய விவாதங்களின் போது வலியுறுத்தியது. இடதுசாரிக்கட்சிகளின் அச்சத்தில் நியாயம் உண்டு என்று அப்போது கருணாநிதி கூறினார். ஆனால் அந்த உடன்பாட்டில் இறுதியாக கையெழுத்திட காங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவுசெய்தபோது ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தி.மு.க காட்டவில்லை என்பதையும், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது அரசுக்கு அனைத்து வகையிலும் தி.மு.க துணையாக நின்றது என்பதையும் மறந்துவிடுவதற்கில்லை.
குடும்ப முன்னேற்றக் கழகம் என்று குற்றம் சாட்டும் பிரகாஷ்காரத்தும் அவருடைய துணைவியார் பிருந்தா காரத்தும் இணைந்து இயக்கப்பணி ஆற்றவில்லையா என்று கருணாநிதி கேட்டுள்ளார்.
தோழர் பிரகாஷ்காரத் படிக்கும் காலத்திலேயே மாணவர் சங்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். கட்சியில் இணைந்து தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் மூலம் உயர் பொறுப்புக்கு வந்தவர். தோழர் பிருந்தா காரத்தும் மாணவர் சங்கம், மாதர் சங்கம் என பல்வேறு அமைப்புகளில் பணியாற்றி கட்சிப் பொறுப்புக்கு வந்தவர். இவர்கள் இருவரும் இல்லற வாழ்விலும் இணைந்தனர். ஆனால் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை அபகரித்துக்கொண்டதில்லை. ஆட்சி அதிகாரத்திலும் பங்கேற்றதில்லை. அதன் வழியாக சொத்து சேர்த்ததும் இல்லை என்பதும் முதல்வரின் கேள்விக்கு விடையாகவும் விளக்கமாகவும் விளங்குகிறது. குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக்கூடாது என்பதல்ல. கட்சியே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடக்கூடாது.
ஆனால் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியிலும் மத்தியமாநில ஆட்சியிலும் எத்தனை பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதையும் கேபிள் டிவி துவங்கி திரையரங்கு வரை, கல்வி நிலையங்கள் துவங்கி கப்பல், விமான போக்குவரத்து வரை கையகப்படுத்தி அதன் வழியாக தங்கள் சொத்துக்களை அதிகரித்திருக்கிறார்கள் என்று பட்டியல் போடவேண்டிய அவசியமில்லை. பல்வேறு ஊடகங்களிலும் வந்த செய்திதான் அது. nullநீராராடியா டேப் உரையாடலும் இதற்கு மேலும் சான்றாக அமையும்.
குடும்பத்தினரிடையேயான ஆதிக்க போட்டி எவ்வாறு அரசியல் கொலைகள் வரை இட்டுச்சென்றது என்பதும் தமிழகம் அறிந்த செய்திதான். இதனால் தான் குடும்ப முன்னேற்றக்கழகமாக திமுக மாறிவிட்டது என்று பிரகாஷ் காரத் குறிப்பிட்டுள்ளார்.
திருமங்கலம் இடைத்தேர்தல் துவங்கி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரை திமுக நடத்திய பண விநியோகத்தை, அதன் மூலம் வெற்றி பெற நினைப்பதை அந்தக்கட்சி பெருமையாக கருதுகிறதா? இல்லையெனில் அந்த குற்றச்சாட்டை ஆதாரnullர்வமாக மறுக்க முன்வரட்டும்.
நெருக்கடி நிலை காலத்தில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் இடமாக தமிழகம் இருந்தது என்று தோழர். ஈ.எம்.எ நம்nullதிரிபாட் குறிப்பிட்டதை பிரகாஷ்காரத் பார்க்காமல் இருந்துவிட்டாரே அல்லது பார்த்தும் அதை இப்போது மறந்துவிட்டாரே என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
அவசர நிலைக்காலத்தில் தி.மு.க எடுத்த நிலையை மார்க்சிஸ்ட் கட்சி மறக்கவில்லை. பார்க்கத் தவறியதுமில்லை. ஆனால் அதே நேரத்தில் அவசர நிலை காலத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க இப்போது எத்தகைய அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதையும் பார்க்கவேண்டியதுள்ளது அல்லவா?. மாநில சுயாட்சிக்காக திமுக போராடும்போது துணை நிற்க மார்க்சிஸ்ட் கட்சி தயங்கியதில்லை. அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டபோதெல்லாம் கண்டிக்கத் தயங்கியதும் இல்லை. சரியான நிலைபாடு எடுக்கும்போது அதை பாராட்டுவதும், தவறு செய்யும்போது கண்டிப்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கம்.
அவசர நிலை காலத்தை எதிர்த்த திமுக, 63 இடங்கள் அதுவும் காங்கிர கேட்கும் இடங்கள் என்று ஏற்க முடியாத நிபந்தனைகளை விதித்தபோது ஆட்சியிலிருந்து விலகுவதாக கூறிவிட்டு பின்னர் அவர்கள் விதித்த நிபந்தனைகள் அத்தனையையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு ஏன் வந்தது. உண்மையில் இந்த விஷயத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை என்ன என்ற கேள்வி எழுவது இயல்புதானே.
நெருக்கடி நிலை எதிர்ப்பு என்பது திமுகவின் கடந்த கால நினைவாகவே இருக்கிறது. காங்கிரசின் அடாவடிகளுக்கு பணிந்து போவது என்பது நிகழ்கால நிஜமாக இருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை காணும்போது உண்மையில் மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. குடும்ப அரசியலின் நிர்ப்பந்தங்களுக்காக அரசியல் முடிவுகள் எடுப்பது, குடும்பத்தினரை வழக்குகளிலிருந்து பாதுகாப்பது, குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்துக்காக மிரட்டல்களுக்காகப் பணிந்து போவது போன்ற காரியங்களில் தி.மு.க தலைவர் இறங்கிவிட்டதால்தான் குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற விமர்சனம் பொதுமேடைகளில் வைக்கப்படுகிறது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்தும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
08 May 2024வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
விசா கொள்கையில் திடீர் மாற்றம்: ஆஸி., நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
08 May 2024மெல்போர்ன், மாணவர்களுக்கான விசா கொள்கையில் ஆஸ்திரேலிய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.
-
நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதா? - இந்தியர்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் : பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்
08 May 2024புதுடெல்லி : நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களை அவமதிப்பதா? என்று பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.