முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

புதன்கிழமை, 8 மே 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை :  கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

நடவடிக்கை இல்லை... 

ராமநாதபுரம் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஒத்தக்கடை யானைமலை பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் 7 நபர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்திய நிலையில், அப்பகுதியில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய கான்முகமது என்பவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள்,i புகார் அளிக்க முன் வருவதில்லை. மதுரை ஒத்தக்கடை பகுதியில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.

உரிய நடவடிக்கை.... 

ஆகவே ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதை பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

2,486 பேர் கைது... 

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "ஒத்தக்கடையில் நடைபெற்ற சம்பவம் கஞ்சா உபயோகித்ததால் அல்ல. மது அருந்தியதாலேயே. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.

இறுதி அறிக்கை.... 

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? மதுரை ஒத்தக்கடை இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து