முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலுவை நீக்க காங்கிரஸ் சீரமைப்பு குழு கோரிக்கை

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.24 - காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை நீக்கிய விவகாரம் சம்பந்தமாக சோனியா அமைத்த குழு தங்கபாலு மற்றும் நீக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அதில் தங்கபாலு மீது நீக்கப்பட்டவர்கள் சரமாரி புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் சீரமைப்பு குழு தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.இது பற்றி விபரம் வருமாறு:-கட்சியில் இருந்து nullக்கப்பட்ட இளைஞர் காங். நிர்வாகிகளிடம் 2​வது நாளாக விசாரணை; தங்கபாலு மீது சரமாரி புகார் தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் உள்பட 19 பேரை தங்கபாலு கட்சியில் இருந்து nullக்கினார். அவர்களில் தென் சென்னை மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ்பிரகாஷ், ஈரோடு மாவட்ட தலைவர் சுரேஷ், திருப்nullர் மாவட்டத் தலைவர் ஜவஹர்பாபு, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரஞ்சன்குமார், ரஞ்சித், விஜயசேகர், கமல், கராத்தே சக்திவேல் ஆகிய 8 பேரும் அடங்குவார்கள். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை nullக்கியது இளைஞர் காங்கிர சாரிடையே கொந்தளிப்பை எற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து சஜீவ் ஜோசப் தலைமையிலான குழுவை அனுப்பி வைத்தனர். இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர். முதலில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 19 பேரையும் என்னென்ன காரணங்களுக்காக nullக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான புகார்கள் என்னென்ன என்பது பற்றி தங்கபாலு விசாரணை குழுவிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்று 4 பேரிடம் விசாரணை நடந் தது. இன்று 2​வது நாளாக ஈரோடு, திருப்nullர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது தங்கபாலு மீது சர மாரியான குற்றச்சாட்டுக்களை இளைஞர் காங்கிரசார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு தங்களை பழி வாங்கியதாக தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூறும் போது, நாங்கள் தேர்தலில் முழுமனதுடன் பணியாற்றி இருக்கிறோம். எங்கு எங்கெல்லாம் பிரசாரம் செய்தோம், எந்த வாகனத்தில் சென்றோம் என்பது உள்பட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் ஒப்படைத்து இருக்கிறோம். கட்சிக்காக உழைத்த எங்களை இளங்கோவன் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பழி வாங்கி உள்ளார். இதுபற்றி தெளிவாக விசாரணை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம் என்றனர். விசாரணை நடத்தி வரும் சஜீவ்ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது:​ nullக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகிறேன். nullக்கப்பட்ட 8 பேர் மட்டு மல்லாமல் மேலும் சில நிர்வாகிகளும் என்னை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார்கள். இன்னும் 2 நாளில் விசாரணை முடிவடையும். இந்த பிரச்சினை காங்கிரஸ் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சினை எனவே விசாரணை பற்றி எதையும் வெளியில் சொல்ல முடியாது.எல்லா தரப்பினரிடமும் விசாரித்தேன். விசாரணை முடிந்ததும் அறிக்கையை டெல்லியில் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸ் சீரமைப்பு குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் சென்னை மாநகராட்சி அருகே உள்ள பிக்னிக் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சீரமைப்பு குழு அமைப்பாளர் ஜி.ஏ.வடிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய அனைவரும் தமிழக காங்கிரசை காப்பாற்ற வேண்டுமானால் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தங்கபாலுவை nullநீக்க வேண்டும், தமிழக மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து முலாம்நபி ஆசாத்தை nullநீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். குலாம்நபிஆசாத், தங்கபாலுவை nullநீக்க முதலில் மண்டல அளவில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும், அடுத்ததாக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத், தங்கபாலு மாற்றப்படவில்லை என்றால் சத்தியமூர்த்தி பவன் முன்பு மாநில அளவில் காங்கிரசாரை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது என்றும், அதன் பிறகு டெல்லிக்கு தனி ரெயிலில் சென்று சோனியாவை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜி.ஏ.வடிவேலு நிருபர்களிடம் கூறும்போது, குலாம்நபிஆசாத், தங்க பாலுவை nullக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.எம்.இதயத்துல்லா, மயிலை பெரியசாமி, கவிஞர் ராமலிங்கஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தேனி அழகர்ராஜா, தர்மபுரி மனோகரன், தலைமை நிலைய செயலாளர் நெல்லைசாமி, தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையார், ஜி.கே.தாஸ், வக்கீல் ஜோதிராமலிங்கம், நெல்லை சிவாஜி, முத்துக்குமார், எம்.எஸ்.திரவியம், ஜெயச்சந்திரன், மதுரை அமீர்ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago