முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 14 மணி நேரத்திற்கு மழை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.2​4 - வளி மண்டலத்தில் சுழற்சி காரணமாக தமிழகம் எங்கும் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது பற்றி விபரம் வருமாறு:-

 வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 14 செ.மீ., காஞ்சீபுரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை nullநீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார். தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோடை காலத்தில் பெய்யும் திடீர் மழையால் வெப்பம் தணிந்துள்ளது. குளிர்ச்சியான சீதோஷ்னம் நிலவுவதால் பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்பவர்கள் சந்தோஷமடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் குறைந்ததால் ஜனநடமாட்டம் அதிகம் இருந்ததை காண முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்