எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம், ஏப்.26 - தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 3 பேர் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்தனர். பலருக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது. வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இது குறித்த விபரம் வருமாறு:-
காஞ்சீபுரம் அருகே உள்ள ஓரிக்கை, தும்பவனம் காட்டுப் பகுதியில் ஒரு கும்பல் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று இரவு சில வாலிபர்கள் அந்த பகுதி அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் சாராயக் கும்பலை சேர்ந்த சிலர் அந்த வாலிபர்களிடம் எப்படி எங்கள் ஏரியாவுக்குள் அமர்ந்து மது குடிக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இது பற்றி தெரிந்ததும் சாராயக் கும்பலை சேர்ந்த மேலும் 20க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள், உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதத்துடன் அங்குவந் தனர். அவர்களை பார்த் ததும் மோதலில் ஈடுபட்ட வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓரிக்கை, தும்பவனம் பகுதிக்கு ஓட்டம் பிடித்தனர். அவர்களை விடாமல் சாராய கும்பல் விரட்டிச் சென்றனர். வாலிபர்கள் அவர்களிடம் இருந்து தப்பி மறைவான இடத்தில் பதுங்கிக் கொண்டனர்.
இதனால் ஆவேசமடைந்த அந்த கும்பல் கத்தி, அரிவாளுடன் ஊருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை பார்த்து ரோட்டில் நின்றவர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். வீட்டில் இருந்த ஆண்களும், பெண்களும் வெளியே வர பயந்து கதவுகளை nullட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்த சாராய கும்பல் தங்கள் கண்களில் பட்ட வாகனங்கள், வீட்டு கதவுகளில் கற்களை தூக்கி வீசி எறிந்தனர்.
காந்திநகர் பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப் பாளர் டேவிட் என்பவரது வீட்டையும் அவர்கள் நொறுக்கினர். ஜன்னல், கதவுகளில் கற்களை வீசினர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார், பைக், லாரியை அடித்து உடைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் அவர்கள் உயிர்தப்பினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் சிலர் அவர்களை தட்டிக்கேட் டனர். கோபம் அடைந்த அவர்கள் குமாரி, தன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர்களுக்கு கை, கழுத்து உடலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை மிரட்டி எச்சரிக்கை விடுத்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ் பெக்டர்கள் சரவணன், பாலசுப்பிர மணியன், சாந்தாராஜி, சிவபாத சேகரன் மற்றும் அதிரடி போலீசார் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்பகுதியில் மேலும் மோதல் ஏற்பட்டாமல் இருக்கும் வகையில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மோதலில் ஈடுபட்ட ஓரிக்கை, தும்பவனம், பொய்யாகுளம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த வடிவேலு, ஸ்ரீதர், தினேஷ், செல்லப்பன், சின்னையன், வரதன், கருணாகரன், வாசுதேவன், வேலு, கான் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை வலை வீசி தேடிவருகிறார்கள். சாராயகும்பலுக்கு தலை வராக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
20 Jul 2025சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ள