எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், ஏப்.28 - தமிழகத்தின் பல பகுதிகளில் ஏராளமானோர்களிடம் ஆசிரியர், வி.ஏ.ஓ., சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய்களை சுருட்டிய மதுரை மோசடி மன்னன், எங்கும் ஆவணங்களை கொடுக்காமலும், தடயங்களை விட்டுச்செல்லாமல் சாமர்த்தியமாக மோசடிகளை அரங்கேற்றி தலைமறைவாகி வந்துள்ளார். இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரிலும் மோசடி செய்து தலைமறைவான மோசடி மன்னன் அவரது மனைவி, மைத்துனர் போட்டோக்கள் கிடைத்ததால் அவரின் தொடர் மோசடிக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
கோவை தொப்பம்பட்டியைச்சேர்ந்த விவேகானந்தன் வெறும் 9ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிருந்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல், மதுஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பிருந்தாவின் சகோதரர் கெவினும் உள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவரிசை காட்டி வந்த விவேகானந்தன் குடும்பத்தினர் ஒரு இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தது இல்லை. அதற்குள் அப்பகுதியில் ஏமாந்தவர்களிடம் கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்.
ஒரு பகுதியில் குடியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பவராக தேடுவார். அவர்களிடம் தான் மிகப்பெரிய செல்வந்தர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தனக்கு தொழில்கள் இருப்பதாக கூறி, உங்களது வீடு வாடகைக்கு வேண்டும். வாடகை எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. எனது குடும்பத்தினர் வசதியாக வாழ்பவர்கள் என கூறுவார். வீட்டின் உரிமையாளர் கேட்கும் வாடகையை காட்டிலும் கூடுதலாக 5மடங்கு தருவதாகவும் வீடு வசதியாக இருக்கவேண்டும் என அடக்கமாகவும், அமைதியாகவும் கோரிக்கை வைப்பாராம். விவேகானந்தனின் நடவடிக்கைகளை பார்க்கும் வீட்டின் உரிமையாளர், அவர் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர், சாந்தமானவர், வசதியானவர் என நம்பி வீட்டை வாடகைக்கு கொடுத்து விடுவர்.
வீட்டில் குடியேறும் விவேகானந்தன் அருகில் வசிப்பவர்கள் தன்னை மிகப்பெரிய செல்வந்தன் என நம்ப வேண்டும் என்பதற்காக, வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு தனது சொந்த செலவிலேயே சில மாறுதல்களை செய்து கொள்வார். விவேகானந்தரிடம் உள்ள பல சொகுசு கார்களில் தினமும் நேரத்திற்கு ஒரு கார்களில் சென்றுள்ளார். இதன்மூலம் அந்தந்த பகுதியில் பலரிடமும் நண்பர் போல் பழகி அவர்கள் மூலமாக பலரது நட்பையும் பெற்றுவிடுவது விவேகானந்தனின் வழக்கம். பழகியவர்களிடம் தனக்கு கணக்கில்லாத சொத்துக்கள் இருப்பதாகவும் அரசியல் பெரும் புள்ளிகளுடன் நெருங்கிய பழக்கம் உண்டு என்றும், தன்னால் அரசிடம் எளிதாக காரியம் சாதிக்க முடியும் என்றும் விவேகானந்தன் ரீல் விட்டுள்ளார். மற்றவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்கள் முழுமையாக தன்னை நம்பும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது போலவும் நடித்துள்ளார். விவேகானந்தனின் இந்த கபட நாடகத்தை அறியாமல், எப்படியாவது தங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் போதும் என விவேகானந்தன் கேட்ட தொகையை கொடுத்து ஏராளமானோர் ஏமாந்துள்ளனர்.
பணம் கொடுக்கும் போது பணத்துக்கு என்ன உத்திரவாதம் என கேட்பவர்களிடம், என்னை நம்ப வில்லையா நான் உங்களுக்கு உதவ தயாராக இல்லை. நீங்கள் கொடுக்கும் பணத்தை நானா வைத்துக்கொள்ளப்போகிறேன். அரசு வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் உங்களுக்கு உதவலாம் என்று தான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி செய்ய நினைக்கும் என்மீது சந்தேகப்படுகிறீர்களே. இது எனக்கு தேவையில்லாத வேலை என மிகுந்த கோபத்துடன் வெளியில் செல்ல முற்படுவாராம். அவரது கோபத்தை கண்டு உண்மையிலேயே நல்ல மனிதர் தான் என நினைத்து எழுதி வாங்காமல் கூட பணத்தை விவேகானந்தனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். விவேகானந்தனின் கோபமான பேச்சுகளுக்கும் செவி சாய்க்காதவர்களிடம் அவரது மனைவி பிருந்தா சென்று எனது கணவர் ஏராளமானோருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் பாதி பணத்தை இப்போது கொடுங்கள் மீதியை வேலைகிடைத்தபின்னர் கொடுத்தால் போதும் என்பாராம். அவரது ஏமாற்றுப்பேச்சை நம்பியவர்களும் விவேகானநதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
மதுரை திருநகரில் குடியிருந்த காலங்களிலும் மோசடியில் ஈடுபட்டு வந்த விவேகானந்தன், தேர்தல் காலத்தில் தேர்தலை காரணம் காட்டியும் பல மோசடிகளில் ஈடுபட்டார். அங்குள்ள பலரிடம் வங்கியில் தங்க காசு, தங்க பிஸ்கட், பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் தற்போது தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் அவற்றை தற்போது எடுக்கமுடியவில்லை. தனது தொழிலுக்கு உடனடியாக பணம் தேவை என பலரிடமும் ஊட்டியில் பல கோடிக்கு எஸ்டேட் வாங்க உள்ளதாகவும் அதற்கு பல லட்சம் ரூபாய் தேவையென்றும் கூறி தேர்தல் முடிந்தவுடன் பணமாகவோ, தங்கமாகவோ வங்கியிலிருந்து எடுத்து கொடுத்துவிடுவதாகவும் கூறி பல லட்சங்களை மோசடி செய்துவிட்டு விவேகானந்தனின் குடும்பத்தினர் தலைவறைவாகிவிட்டனர். மதுரை மோசடி மன்னன் விவேகானந்தன் பணத்தை பெறும்போது அதற்காக பத்திரத்திலோ, புரோ நோட்டிலோ அல்லது வெள்ளைப் பேப்பரிலோ எழுதி கையெழுத்து போட்டுக்கொடுப்பதில்லை. பெற்ற பணத்திற்கு ஆதாரமாக எதையும் கொடுக்காமல் மாட்டிக்கொள்ளாத வகையிலும் விவேகானந்தன் தெளிவாக மோசடி வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
பல ஊர்களில் விவேகானந்தனிடம் ஏமாந்தவர்களில் சிலர் போலீசில் புகார் செய்திருந்தாலும் ஏராளமானோர் புகார் செய்யவில்லை. மேலும் அவர் ஊருக்கு ஊர் ஒரு பெயரை வைத்து ஏமாற்றி வந்ததால் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் சுதாரிக்க முடியவில்லை. இறுதியாக மதுரை திருநகரில் அவரது குடும்ப போட்டோ சிக்கியதால் அவை நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் சுதாரித்ததுடன் ஏற்கனவே விவேகானந்தனிடம் ஏமாந்தவர்கள் தற்போது போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


