எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், ஏப்.28 - தமிழகத்தின் பல பகுதிகளில் ஏராளமானோர்களிடம் ஆசிரியர், வி.ஏ.ஓ., சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய்களை சுருட்டிய மதுரை மோசடி மன்னன், எங்கும் ஆவணங்களை கொடுக்காமலும், தடயங்களை விட்டுச்செல்லாமல் சாமர்த்தியமாக மோசடிகளை அரங்கேற்றி தலைமறைவாகி வந்துள்ளார். இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரிலும் மோசடி செய்து தலைமறைவான மோசடி மன்னன் அவரது மனைவி, மைத்துனர் போட்டோக்கள் கிடைத்ததால் அவரின் தொடர் மோசடிக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
கோவை தொப்பம்பட்டியைச்சேர்ந்த விவேகானந்தன் வெறும் 9ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிருந்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல், மதுஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பிருந்தாவின் சகோதரர் கெவினும் உள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவரிசை காட்டி வந்த விவேகானந்தன் குடும்பத்தினர் ஒரு இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தது இல்லை. அதற்குள் அப்பகுதியில் ஏமாந்தவர்களிடம் கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்.
ஒரு பகுதியில் குடியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பவராக தேடுவார். அவர்களிடம் தான் மிகப்பெரிய செல்வந்தர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தனக்கு தொழில்கள் இருப்பதாக கூறி, உங்களது வீடு வாடகைக்கு வேண்டும். வாடகை எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. எனது குடும்பத்தினர் வசதியாக வாழ்பவர்கள் என கூறுவார். வீட்டின் உரிமையாளர் கேட்கும் வாடகையை காட்டிலும் கூடுதலாக 5மடங்கு தருவதாகவும் வீடு வசதியாக இருக்கவேண்டும் என அடக்கமாகவும், அமைதியாகவும் கோரிக்கை வைப்பாராம். விவேகானந்தனின் நடவடிக்கைகளை பார்க்கும் வீட்டின் உரிமையாளர், அவர் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர், சாந்தமானவர், வசதியானவர் என நம்பி வீட்டை வாடகைக்கு கொடுத்து விடுவர்.
வீட்டில் குடியேறும் விவேகானந்தன் அருகில் வசிப்பவர்கள் தன்னை மிகப்பெரிய செல்வந்தன் என நம்ப வேண்டும் என்பதற்காக, வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு தனது சொந்த செலவிலேயே சில மாறுதல்களை செய்து கொள்வார். விவேகானந்தரிடம் உள்ள பல சொகுசு கார்களில் தினமும் நேரத்திற்கு ஒரு கார்களில் சென்றுள்ளார். இதன்மூலம் அந்தந்த பகுதியில் பலரிடமும் நண்பர் போல் பழகி அவர்கள் மூலமாக பலரது நட்பையும் பெற்றுவிடுவது விவேகானந்தனின் வழக்கம். பழகியவர்களிடம் தனக்கு கணக்கில்லாத சொத்துக்கள் இருப்பதாகவும் அரசியல் பெரும் புள்ளிகளுடன் நெருங்கிய பழக்கம் உண்டு என்றும், தன்னால் அரசிடம் எளிதாக காரியம் சாதிக்க முடியும் என்றும் விவேகானந்தன் ரீல் விட்டுள்ளார். மற்றவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்கள் முழுமையாக தன்னை நம்பும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது போலவும் நடித்துள்ளார். விவேகானந்தனின் இந்த கபட நாடகத்தை அறியாமல், எப்படியாவது தங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் போதும் என விவேகானந்தன் கேட்ட தொகையை கொடுத்து ஏராளமானோர் ஏமாந்துள்ளனர்.
பணம் கொடுக்கும் போது பணத்துக்கு என்ன உத்திரவாதம் என கேட்பவர்களிடம், என்னை நம்ப வில்லையா நான் உங்களுக்கு உதவ தயாராக இல்லை. நீங்கள் கொடுக்கும் பணத்தை நானா வைத்துக்கொள்ளப்போகிறேன். அரசு வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் உங்களுக்கு உதவலாம் என்று தான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி செய்ய நினைக்கும் என்மீது சந்தேகப்படுகிறீர்களே. இது எனக்கு தேவையில்லாத வேலை என மிகுந்த கோபத்துடன் வெளியில் செல்ல முற்படுவாராம். அவரது கோபத்தை கண்டு உண்மையிலேயே நல்ல மனிதர் தான் என நினைத்து எழுதி வாங்காமல் கூட பணத்தை விவேகானந்தனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். விவேகானந்தனின் கோபமான பேச்சுகளுக்கும் செவி சாய்க்காதவர்களிடம் அவரது மனைவி பிருந்தா சென்று எனது கணவர் ஏராளமானோருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் பாதி பணத்தை இப்போது கொடுங்கள் மீதியை வேலைகிடைத்தபின்னர் கொடுத்தால் போதும் என்பாராம். அவரது ஏமாற்றுப்பேச்சை நம்பியவர்களும் விவேகானநதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
மதுரை திருநகரில் குடியிருந்த காலங்களிலும் மோசடியில் ஈடுபட்டு வந்த விவேகானந்தன், தேர்தல் காலத்தில் தேர்தலை காரணம் காட்டியும் பல மோசடிகளில் ஈடுபட்டார். அங்குள்ள பலரிடம் வங்கியில் தங்க காசு, தங்க பிஸ்கட், பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் தற்போது தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் அவற்றை தற்போது எடுக்கமுடியவில்லை. தனது தொழிலுக்கு உடனடியாக பணம் தேவை என பலரிடமும் ஊட்டியில் பல கோடிக்கு எஸ்டேட் வாங்க உள்ளதாகவும் அதற்கு பல லட்சம் ரூபாய் தேவையென்றும் கூறி தேர்தல் முடிந்தவுடன் பணமாகவோ, தங்கமாகவோ வங்கியிலிருந்து எடுத்து கொடுத்துவிடுவதாகவும் கூறி பல லட்சங்களை மோசடி செய்துவிட்டு விவேகானந்தனின் குடும்பத்தினர் தலைவறைவாகிவிட்டனர். மதுரை மோசடி மன்னன் விவேகானந்தன் பணத்தை பெறும்போது அதற்காக பத்திரத்திலோ, புரோ நோட்டிலோ அல்லது வெள்ளைப் பேப்பரிலோ எழுதி கையெழுத்து போட்டுக்கொடுப்பதில்லை. பெற்ற பணத்திற்கு ஆதாரமாக எதையும் கொடுக்காமல் மாட்டிக்கொள்ளாத வகையிலும் விவேகானந்தன் தெளிவாக மோசடி வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
பல ஊர்களில் விவேகானந்தனிடம் ஏமாந்தவர்களில் சிலர் போலீசில் புகார் செய்திருந்தாலும் ஏராளமானோர் புகார் செய்யவில்லை. மேலும் அவர் ஊருக்கு ஊர் ஒரு பெயரை வைத்து ஏமாற்றி வந்ததால் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் சுதாரிக்க முடியவில்லை. இறுதியாக மதுரை திருநகரில் அவரது குடும்ப போட்டோ சிக்கியதால் அவை நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் சுதாரித்ததுடன் ஏற்கனவே விவேகானந்தனிடம் ஏமாந்தவர்கள் தற்போது போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.