எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், ஏப்.28 - தமிழகத்தின் பல பகுதிகளில் ஏராளமானோர்களிடம் ஆசிரியர், வி.ஏ.ஓ., சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய்களை சுருட்டிய மதுரை மோசடி மன்னன், எங்கும் ஆவணங்களை கொடுக்காமலும், தடயங்களை விட்டுச்செல்லாமல் சாமர்த்தியமாக மோசடிகளை அரங்கேற்றி தலைமறைவாகி வந்துள்ளார். இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரிலும் மோசடி செய்து தலைமறைவான மோசடி மன்னன் அவரது மனைவி, மைத்துனர் போட்டோக்கள் கிடைத்ததால் அவரின் தொடர் மோசடிக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
கோவை தொப்பம்பட்டியைச்சேர்ந்த விவேகானந்தன் வெறும் 9ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிருந்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல், மதுஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பிருந்தாவின் சகோதரர் கெவினும் உள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவரிசை காட்டி வந்த விவேகானந்தன் குடும்பத்தினர் ஒரு இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தது இல்லை. அதற்குள் அப்பகுதியில் ஏமாந்தவர்களிடம் கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்.
ஒரு பகுதியில் குடியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பவராக தேடுவார். அவர்களிடம் தான் மிகப்பெரிய செல்வந்தர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தனக்கு தொழில்கள் இருப்பதாக கூறி, உங்களது வீடு வாடகைக்கு வேண்டும். வாடகை எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. எனது குடும்பத்தினர் வசதியாக வாழ்பவர்கள் என கூறுவார். வீட்டின் உரிமையாளர் கேட்கும் வாடகையை காட்டிலும் கூடுதலாக 5மடங்கு தருவதாகவும் வீடு வசதியாக இருக்கவேண்டும் என அடக்கமாகவும், அமைதியாகவும் கோரிக்கை வைப்பாராம். விவேகானந்தனின் நடவடிக்கைகளை பார்க்கும் வீட்டின் உரிமையாளர், அவர் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர், சாந்தமானவர், வசதியானவர் என நம்பி வீட்டை வாடகைக்கு கொடுத்து விடுவர்.
வீட்டில் குடியேறும் விவேகானந்தன் அருகில் வசிப்பவர்கள் தன்னை மிகப்பெரிய செல்வந்தன் என நம்ப வேண்டும் என்பதற்காக, வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு தனது சொந்த செலவிலேயே சில மாறுதல்களை செய்து கொள்வார். விவேகானந்தரிடம் உள்ள பல சொகுசு கார்களில் தினமும் நேரத்திற்கு ஒரு கார்களில் சென்றுள்ளார். இதன்மூலம் அந்தந்த பகுதியில் பலரிடமும் நண்பர் போல் பழகி அவர்கள் மூலமாக பலரது நட்பையும் பெற்றுவிடுவது விவேகானந்தனின் வழக்கம். பழகியவர்களிடம் தனக்கு கணக்கில்லாத சொத்துக்கள் இருப்பதாகவும் அரசியல் பெரும் புள்ளிகளுடன் நெருங்கிய பழக்கம் உண்டு என்றும், தன்னால் அரசிடம் எளிதாக காரியம் சாதிக்க முடியும் என்றும் விவேகானந்தன் ரீல் விட்டுள்ளார். மற்றவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்கள் முழுமையாக தன்னை நம்பும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அரசு வேலைக்கு காத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது போலவும் நடித்துள்ளார். விவேகானந்தனின் இந்த கபட நாடகத்தை அறியாமல், எப்படியாவது தங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் போதும் என விவேகானந்தன் கேட்ட தொகையை கொடுத்து ஏராளமானோர் ஏமாந்துள்ளனர்.
பணம் கொடுக்கும் போது பணத்துக்கு என்ன உத்திரவாதம் என கேட்பவர்களிடம், என்னை நம்ப வில்லையா நான் உங்களுக்கு உதவ தயாராக இல்லை. நீங்கள் கொடுக்கும் பணத்தை நானா வைத்துக்கொள்ளப்போகிறேன். அரசு வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் உங்களுக்கு உதவலாம் என்று தான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி செய்ய நினைக்கும் என்மீது சந்தேகப்படுகிறீர்களே. இது எனக்கு தேவையில்லாத வேலை என மிகுந்த கோபத்துடன் வெளியில் செல்ல முற்படுவாராம். அவரது கோபத்தை கண்டு உண்மையிலேயே நல்ல மனிதர் தான் என நினைத்து எழுதி வாங்காமல் கூட பணத்தை விவேகானந்தனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். விவேகானந்தனின் கோபமான பேச்சுகளுக்கும் செவி சாய்க்காதவர்களிடம் அவரது மனைவி பிருந்தா சென்று எனது கணவர் ஏராளமானோருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் பாதி பணத்தை இப்போது கொடுங்கள் மீதியை வேலைகிடைத்தபின்னர் கொடுத்தால் போதும் என்பாராம். அவரது ஏமாற்றுப்பேச்சை நம்பியவர்களும் விவேகானநதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
மதுரை திருநகரில் குடியிருந்த காலங்களிலும் மோசடியில் ஈடுபட்டு வந்த விவேகானந்தன், தேர்தல் காலத்தில் தேர்தலை காரணம் காட்டியும் பல மோசடிகளில் ஈடுபட்டார். அங்குள்ள பலரிடம் வங்கியில் தங்க காசு, தங்க பிஸ்கட், பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் தற்போது தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் அவற்றை தற்போது எடுக்கமுடியவில்லை. தனது தொழிலுக்கு உடனடியாக பணம் தேவை என பலரிடமும் ஊட்டியில் பல கோடிக்கு எஸ்டேட் வாங்க உள்ளதாகவும் அதற்கு பல லட்சம் ரூபாய் தேவையென்றும் கூறி தேர்தல் முடிந்தவுடன் பணமாகவோ, தங்கமாகவோ வங்கியிலிருந்து எடுத்து கொடுத்துவிடுவதாகவும் கூறி பல லட்சங்களை மோசடி செய்துவிட்டு விவேகானந்தனின் குடும்பத்தினர் தலைவறைவாகிவிட்டனர். மதுரை மோசடி மன்னன் விவேகானந்தன் பணத்தை பெறும்போது அதற்காக பத்திரத்திலோ, புரோ நோட்டிலோ அல்லது வெள்ளைப் பேப்பரிலோ எழுதி கையெழுத்து போட்டுக்கொடுப்பதில்லை. பெற்ற பணத்திற்கு ஆதாரமாக எதையும் கொடுக்காமல் மாட்டிக்கொள்ளாத வகையிலும் விவேகானந்தன் தெளிவாக மோசடி வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
பல ஊர்களில் விவேகானந்தனிடம் ஏமாந்தவர்களில் சிலர் போலீசில் புகார் செய்திருந்தாலும் ஏராளமானோர் புகார் செய்யவில்லை. மேலும் அவர் ஊருக்கு ஊர் ஒரு பெயரை வைத்து ஏமாற்றி வந்ததால் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் சுதாரிக்க முடியவில்லை. இறுதியாக மதுரை திருநகரில் அவரது குடும்ப போட்டோ சிக்கியதால் அவை நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் சுதாரித்ததுடன் ஏற்கனவே விவேகானந்தனிடம் ஏமாந்தவர்கள் தற்போது போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
1040-வது சதய விழா: மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
01 Nov 2025சென்னை : மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
01 Nov 2025மதுரை : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
தொழில்நுட்ப வலிமையால் ஆபரேஷன் சிந்தூர் கொள்கை : ராணுவ தலைமை தளபதி பெருமிதம்
01 Nov 2025போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.
-
வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
01 Nov 2025சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும்,வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ல
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: திண்டுக்கல் சீனிவாசன்
01 Nov 2025மதுரை : எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம் : ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
01 Nov 2025கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன், பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.


