முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஏப் - 30 - இலங்கை போரில் 40 ஆயிரம் தமிழர்களை கொன்ற  ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த பிரியன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதில் அந்நாட்டு அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாக ஐக்கியநாடுகள் சபை அறிக்கை அளித்துள்ளது. இலங்கை தமிழர்கள் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள்.தமிழர்களின் ரத்த சம்பந்தம் உடையவர்கள். சீக்கியர்கள், முஸ்லிம்கள் எந்த நாட்டில் வசித்தாலும் அவர்களை இந்தியர்களாக கருதும் இந்திய அரசு,தமிழர்களை அவ்வாறு பாவிப்பது இல்லை. இதனால் அண்டை நாடுகளில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கண்டித்தன. இலங்கை அதிபர் ர ராஜபக்சே தூண்டுதலின் பேரில் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதை இந்திய அரசு தீவிரமாக கருத்தில் கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட போது மத்திய அரசு கண்டித்தது. சோமாலியா, லிபியாவில் நடந்த புரட்சியை இந்திய அரசு ஆதரித்தது. ஆனால் இலங்கை விஷயத்தில் இந்திய அரசு கண்டும் காணாமலும் உள்ளது. எனவே ராஜபக்சே மீது ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து அவரை போர் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்