எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, மே.20 - ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் திருப்பூரில் கைதானவர்களிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் சிக்கினார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிரிக்கெட் சூதாட்டமும், வீரர்கள் கைது நடவடிக்கைகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா உள்பட 16 வீரர்கள் சிக்கினர். அதே நேரத்தில் சென்னையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை முடிக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் கைதான தரகர் கொடுத்த தகவலின் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (54) கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட விரும்புவதாக அவரிடம் போலீசார் நைசாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதை நம்பிய லட்சுமணன் சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிரடியாக லட்சுமணன் வீட்டுக்கு போலீசார் புகுந்து அவரை கைது செய்தனர். அப்போது லட்சுமணனின் லேப்டாப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன் அணியும் மோதிய ஆட்டம் ஓடிக்கொண்டிருந்தது. லட்சுமணனிடம் இருந்த லேப்டாப் ரூ.5 லட்சத்து 5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை ரகசிய இடத்தில் அழைத்து சென்று விசாரித்ததில். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(51), உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த அக்பர்(51) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம், லேப்டாப், 7 செல்போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட விவகாரத்தில் லட்சுமணன் தான் முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். அவருக்கு சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள சூதாட்ட தரகர்களிடம் தொடர்பு உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் பாலசுப்பிரமணியம், அக்பர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
சூதாட்டம் மூலம் கோவையில் வசூலான பணத்தை லட்சுமணன் நெட்பேங்கிங் வழியாக சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள தரகர்களுக்கு அனுப்பியுள்ளார். கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பலரது எண்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே சூதாட்டத்தில் ஈடுபட்டதும். அதில் பெரும்பாலானவர்கள் தொழில் அதிபர்கள், கிளப்புகளுக்கு செல்பவர்கள் தான் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் அதிபர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவையில் கைதான இவர்களின் கீழ் இன்னும் ஏராளமான கீழ் மட்ட தரகர்களும் இருந்துள்ளனர். லட்சுமணன் கைதானதை தொடர்ந்து அனைவரும் தமது செல்போன்களை சுட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் வலை விரித்து தேடி வருகிறார்கள்.
தலைமறைவாக இருப்பவர்கள் குறித்தும் சூதாட்ட பணத்தை வெளிமாநில தரகர்களுக்கு அனுப்பியது எப்படி என்பது குறித்தும் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திருப்பூரை சேர்ந்த 2 தரகர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சில பனியன் அதிபர்களும் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. தற்போது கைதானவர்களின் பெயர் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் தலைமறைவாகிவிடக்கூடும் என்பதால் கைதானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் கைதான லட்சுமணன் 2000ம் ஆண்டு முதலே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது நடந்துள்ள சூதாட்டம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.1லட்சும் வரை நடந்துள்ளது. ரூ.10 ஆயிரம் கட்டுபவர்கள் பெட்டிங்கில் வெற்றி பெற்றால் ரூ.20 ஆயிரமும் ரூ.1லட்சம் கட்டுபவர்களுக்கு ரூ.2லட்சமும் என எவ்வளவு பணம் கட்டப்படுகிறதோ அவர்களுக்கு அப்படியே இரட்டிப்பு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சூதாட்ட சம்பவம் கோவை, திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
18 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி
18 Oct 2025சென்னை, சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 8 பேர் பலி
18 Oct 2025காபூல், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பாகிஸ்தான் - ஆப்கான் மோதலை தீர்ப்பது மிக எளிது: அதிபர் ட்ரம்ப்
18 Oct 2025வாஷிங்டன் : பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு
18 Oct 2025புதுச்சேரி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.


