எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, மே.20 - ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் திருப்பூரில் கைதானவர்களிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் சிக்கினார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிரிக்கெட் சூதாட்டமும், வீரர்கள் கைது நடவடிக்கைகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா உள்பட 16 வீரர்கள் சிக்கினர். அதே நேரத்தில் சென்னையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை முடிக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் கைதான தரகர் கொடுத்த தகவலின் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (54) கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட விரும்புவதாக அவரிடம் போலீசார் நைசாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதை நம்பிய லட்சுமணன் சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிரடியாக லட்சுமணன் வீட்டுக்கு போலீசார் புகுந்து அவரை கைது செய்தனர். அப்போது லட்சுமணனின் லேப்டாப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன் அணியும் மோதிய ஆட்டம் ஓடிக்கொண்டிருந்தது. லட்சுமணனிடம் இருந்த லேப்டாப் ரூ.5 லட்சத்து 5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை ரகசிய இடத்தில் அழைத்து சென்று விசாரித்ததில். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(51), உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த அக்பர்(51) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம், லேப்டாப், 7 செல்போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட விவகாரத்தில் லட்சுமணன் தான் முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். அவருக்கு சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள சூதாட்ட தரகர்களிடம் தொடர்பு உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் பாலசுப்பிரமணியம், அக்பர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
சூதாட்டம் மூலம் கோவையில் வசூலான பணத்தை லட்சுமணன் நெட்பேங்கிங் வழியாக சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள தரகர்களுக்கு அனுப்பியுள்ளார். கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பலரது எண்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே சூதாட்டத்தில் ஈடுபட்டதும். அதில் பெரும்பாலானவர்கள் தொழில் அதிபர்கள், கிளப்புகளுக்கு செல்பவர்கள் தான் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் அதிபர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவையில் கைதான இவர்களின் கீழ் இன்னும் ஏராளமான கீழ் மட்ட தரகர்களும் இருந்துள்ளனர். லட்சுமணன் கைதானதை தொடர்ந்து அனைவரும் தமது செல்போன்களை சுட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் வலை விரித்து தேடி வருகிறார்கள்.
தலைமறைவாக இருப்பவர்கள் குறித்தும் சூதாட்ட பணத்தை வெளிமாநில தரகர்களுக்கு அனுப்பியது எப்படி என்பது குறித்தும் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திருப்பூரை சேர்ந்த 2 தரகர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சில பனியன் அதிபர்களும் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. தற்போது கைதானவர்களின் பெயர் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் தலைமறைவாகிவிடக்கூடும் என்பதால் கைதானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் கைதான லட்சுமணன் 2000ம் ஆண்டு முதலே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது நடந்துள்ள சூதாட்டம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.1லட்சும் வரை நடந்துள்ளது. ரூ.10 ஆயிரம் கட்டுபவர்கள் பெட்டிங்கில் வெற்றி பெற்றால் ரூ.20 ஆயிரமும் ரூ.1லட்சம் கட்டுபவர்களுக்கு ரூ.2லட்சமும் என எவ்வளவு பணம் கட்டப்படுகிறதோ அவர்களுக்கு அப்படியே இரட்டிப்பு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சூதாட்ட சம்பவம் கோவை, திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்


