முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலங்குகள் தாக்கி பலியான 3 பேர் குடும்பங்களுக்கு நிதிஉதவி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - காட்டு விலங்குகள் தாக்கி பலியான 3 பேர் குடும்பங்களுக்கு  முதலமைச்சர் ஜெயலலிதா தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் 9.6.2013 அன்று  அய்யம்பாளையம் கிராமத்தை ஒட்டிய கருப்பராயன் காடு என்ற வனப்பகுதியில் காட்டு யானையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,    

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம்,  தாயம்மாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த  சென்னம்மாள் என்பவர் 12.6.2013 அன்று தனது வீட்டின் அருகே காட்டு யானையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், எடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 

சுப்பையா என்பவர்  21.6.2013 அன்று அளக்கரை பகுதி அருகே காட்டு எருமையால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  22.6.2013  அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த ராதிகா,  சென்னம்மாள் மற்றும் காட்டு எருமை தாக்கி அகால மரணமடைந்த சுப்பையா ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் துயரச் சம்பவங்களில்  உயிரிழந்த ராதிகா,  சென்னம்மாள் மற்றும்  சுப்பையா ஆகியோரின்  குடும்பங்களுக்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்