முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்துக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்டு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் அரசு விரயம் செய்கிறது என்று பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் நேற்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி  சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.  29-ந்தேதிக்குள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்