எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே. - 9 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி ஆகியோரது பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை மே 24 ம் தேதிக்கு நீதிபதி ஷைனி தள்ளி வைத்தார்.
உலகிலேயே இமாலய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலாகும். காரணம் இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என கூறப்படுகிறது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா, அவரது செயலாளர்கள் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த்த பெகுரா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் 5 நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான ராசா உள்ளிட்ட பலரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. இந்த டி.வியில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், இதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கனிமொழியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.பி.ஐ. சார்பில் கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மே. 6 ம் தேதி சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கனிமொழி எம்.பிக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 4 ம் தேதியன்று கனிமொழி டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் 6 ம் தேதி அவர் தனிக்கோர்ட்டில் ஆஜரானார். அன்றே அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வருகிற 14 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். ஆனாலும் தினந்தோறும் நீதிமன்றம் வந்து கையெழுத்திட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 14 ம் தேதி வரை கனிமொழி கைதாக மாட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது. மே 14 ம் தேதியன்று அவருக்கு பெயில் கிடைக்குமா? அல்லது ஜெயில் தண்டனை கிடைக்குமா என்பது தெரிந்து விடும்.
இந்த நிலையில் கலைஞர் டி.வியில் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயர் சி.பி.ஐ. குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவே இல்லை. 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியை சேர்த்திருக்கும் போது 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதில் புலனாய்வுத் துறை பாரபட்சம் காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் பெயரையும், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் பொதுநலன் கருதி ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் எம். பர்குவான் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதில் கூட மத்திய புலனாய்வு துறை பாரபட்சம் காட்டுகிறது என்று பர்குவான் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி வரும் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியா மற்றும் டாடா சன்ஸ் நிறுவன சேர்மன் ரத்தன் டாடா ஆகியோரது பங்கு குறித்து மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி காசியாபாத்தை சேர்ந்த தர்மேந்தர் பாண்டே என்பவர் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வரும் 24 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அன்றைய தினமே தயாளு அம்மாளை சேர்க்க வேண்டும் என்று கோரும் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தயாளு அம்மாளை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருக்கும் டாக்டர் முகமது பர்குவான் தான் ஒரு பத்திரிக்கையாளன் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனில் அம்பானியை இந்த வழக்கில் சேர்க்காத விஷயத்தில் சி.பி.ஐ. செய்துள்ள குறைபாடுகளையும் பத்திரிக்கையாளர் பர்குவான் சுட்டிக் காட்டியுள்ளார். ரிலையன்ஸ் குழும அதிகாரிகளான கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா மற்றும் ஹரிநாயர் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு இவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் எல்லாம் அந்த கம்பெனியில் ஒரு சாதாரண ஊழியர்கள். அனில் அம்பானிக்கு தெரியாமல் அல்லது அவரது சம்மதம் இல்லாமல் இவர்களால் எந்த குற்றத்தையும் செய்திருக்க முடியாது என்றும் டாக்டர் பர்குவான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அனில் அம்பானியையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் பர்குவான் கோரியுள்ளார்.
ஆனால் சி.பி.ஐ. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கலைஞர் டி.வியில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன. அவரது டி.வியின் இயக்குனராவார். ஆனால் குற்றப்பத்திரிக்கையில் இவரது பெயர் விடுபட்டுள்ளது. புலனாய்வு துறை(சி.பி.ஐ.) குற்றவாளிகளை தேர்ந்தெடுக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் எழுகிறது என்றும் பர்குவான் தனது மனுவில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மையம் என்ற அமைப்பை பற்றியும் இவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மையம் கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ள அவர், இந்த அமைப்புக்கு பணம் கொடுத்தவர்கள் பட்டியலையும் தனது மனுவுடன் இணைத்துள்ளார். இவ்வாறு பணம் கொடுத்த கம்பெனிகளில் சில, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உரிமம் பெற்ற கம்பெனிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருக்கும் போது தயாளு அம்மாள் பெயர் விடுபட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளையும், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியையும் சேர்க்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் பர்குவான் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 24 ம் தேதி நடைபெறும் என்று சி.பி.ஐ. நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.