முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை மறுசீரமைப்புக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு: அரசு உத்தரவு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.29 - தமிழக சட்டசபையில் கடந்த 2.5.13 அன்று பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பிளாஸ்டிக் கழிவுகள், சாலை மறுசீரமைப்புகளுக்கு உபயோகப்படுத்தப்படும். அதன் மூலம் 2013-14-ம் ஆண்டில் சாலைகளின் தரம் மேம்படுத்தப்படும். இதற்கு ரூ.50 கோடி செலவிடப்படும் என்று கூறினார். 

இதனடிப்படையில் சுற்றுப்புறச்சூழல் இயக்குனர், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிளாஸ்டிக் கழிவுகளை சாலை மறுசீரமைப்பு பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்குவதற்கு, தலைமைச் செயலாளர் தலைமையிலான அங்கீகார குழு அனுமதி அளித்துள்ளது என்று கூறியிருந்தார். 

இயக்குனரின் இந்த முன்மொழிவை சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை ஏற்றுக்கொண்டு, இந்த திட்டத்தை செலவிடும் துறைகளுக்கு ரூ.50 கோடியை பகிர்ந்தளிப்பது குறித்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்