முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மருத்துவ மனையில் லேப்ரோஸ் கோப்பி பிரிவு

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.டிச.17 - சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லேப்ரோஸ்கோப்பி பிரிவு (சிறுதுளை அறுவை சிகிச்சைப் பிரிவு)  இன்று (டிசம்பர் 17) தொடங்கப்படவுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

லேப்ரோஸ்கோப்பி கருவியைப் பயன்படுத்தி சிறு துளைகளின் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் நோயாளிகளுக்கு அதிக ரத்த சேதம் ஏற்படாது.

மேலும் இக்கருவியை உடலுக்குள் செலுத்தி பாதிக்கப்பட்ட இடங்களை திரையில் பார்த்துகொண்டே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

குறைவான நேரத்தில், மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்வதால் நோயாளிகள் விரைவில் வீடு திரும்பலாம்.

20 படுக்கைகள் கொண்ட இந்த பிரிவில் ஒரு தலைமை மருத்துவரும், அவருடன் இரண்டு மருத்துவர்களும் பணியாற்றுவர்.

சிறுதுளை அறுவை சிகிச்சைத் துறையினை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்