எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.டிச.19 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு_பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன் று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது வழக்கம்.அந்த வகையில், விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி வருகின்றன. தற்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 15_ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசாரிடம் கிலியும், நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. யாரோடு கூட்டுச்சேர்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
தே.மு.தி.க.வில் அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலை விட்டே விலகியதை தொடர்ந்து, அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் கடந்த 12_ந்தேதி நடைபெற்றது.கூட்டத்தில், அவைத்தலைவர் பதவியை நீக்க முடிவு செய்யப்பட்டதுடன், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல பா.ஜ.க. தரப்பிலும் கூட்டணிக்கான முயற்சிகள் நடந்து வருகிறது. சிறிய கட்சிகளை சேர்த்துக்கொண்டு தமிழகத்தில் தேர்தலை சந்திக்கலாம் என்று அது கருதுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, டெல்லி அரசியலில் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிரமாக உள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.
மத்திய அரசு செய்து வரும் தவறுகளை முதல்_அமைச்சர் ஜெயலலிதா துணிச்சலுடன் சுட்டிக்காட்டி வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்ட சபையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்.
பெட்ரோல், டீசல், விலைவாசி உயர்வு, தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறியது போன்றவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு_ பொதுக்குழு கூட உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று முதல்_ அமைச்சர் ஜெயலலிதா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது பற்றிய அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்_அமைச்சருமான ஜெயலலிதா ஏற்கனவே வெளியிட்டுள்ளார். அதில் அவர், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 19.12.2013 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்_அமைச்சருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் முதல்_அமைச்சர் ஜெயலலிதா விளக்கி பேசுகிறார்.
கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கவும், பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.