முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஆம்ஆத்மி கட்சி: 700 பேர் உறுப்பினர் ஆனார்கள்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.24 - புதுடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியை வளர்க்க திட்டமிட்டுள்ளனர். தமிழகத்திலும் ஆம்ஆத்மி கட்சி உதயமாகி இருக்கிறது. கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று உறுப்பினர் சேர்க்கை நடந்தது. ஒரே நாளில் 700 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். உறுப்பினர் பதிவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது.

பெண்களும் ஆர்வத்துடன் வந்து உறுப்பினர்களாக சேர்ந்தார்கள். பெயர், முகவரி, பணியாற்றும் விபரம் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை மட்டும் பெற்றுக் கொண்டு உறுப்பினர்களாக சேர்த்தனர்.

களப்பணியாளர்களாக பணியாற்ற ஆர்வம் தெரிவித்தவர்களிடம் மட்டும் குற்றப்பின்னணி ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டு பெற்றனர். இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் இணை அமைப்பாளர் லெனின், பொருளாளர் ஆனந்த் ஆகியோர் கூறியதாவது:_

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஆம்ஆத்மி கட்சி செயல்படுகிறது. சென்னை, கோவை, மதுரையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தியதுபோல் மற்ற மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.

தமிழக மக்கள் அரசியலில் ஒரு மாற்று இயக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்று இயக்கம் ஆம்ஆத்மி கட்சிதான் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்