முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.- 5 - இந்துசமய அறநிலைத்துறை மற்றும் பண்பாட்டுத்துறை அமைசச்ர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டு, ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்    கலை பண்பாட்டுத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், இசைக்கல்லூரிகள், இசைப்பள்ளிகள்,  அரசு கவின் கலைக் கல்லூரிகள், அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு சவகர் சிறுவர்  மன்றம், தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள்  நலவாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும்,  மாநில அரசின் மானியத்துடன்  செயல்படுத்தப்படும்  தொடர்  ஆண்டுத் திட்டங்களையும் நேற்று  4.7.2011 (திங்கட்கிழமை) காலை  10.00 மணியளவில்  ஆய்வு  செய்தார்.      

 அதனைத் தொடர்ந்து,  12.00 மணியளவில்  அருங்காட்சியகத்துறையின் பணிகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களை  ஆய்வு செய்து  ஆலோசனைகளையும், அறிவுரைகளையும்  வழங்கினார்.    ஆய்வுக் கூட்டத்திற்கு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையின்  அரசு முதன்மைச்  செயலாளர் வி.கு.ஜெயக்கொடி, முன்னிலை வகித்தார்கள்.                                     ப.அ.மணி, ஆணையர், கலை பண்பாட்டுத்துறை மற்றும்                                         சோ.சு.ஜவகர்,  ஆணையர், அருங்காட்சியகத்துறை  ஆகியோரும்,    இரு துறைகளின்  இரண்டாம்நிலை  அலுவலர்கள்,  அரசு கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வர்,  இசைக்கல்லூரி முதல்வர்கள், கவின்கலைக் கல்லூரி முதல்வர்கள்  ஆகியோர் கலந்து  கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்