எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாஷிங்டன், ஜூலை - 26 - போர்க் குற்றங்கள் புரிந்த இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. வெளிவிவகாரங்களுக்கான அமெரிக்க எம்.பி.க்கள் குழு இலங்கைக்கு எந்தவிதமான உதவியும் செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததாகவும், தமிழ் பெண்களை கற்பழித்து கொன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தினர். ஐ.நா. சபையும் அதை உறுதி செய்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது. அந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைப்பதாக இருந்தது. அப்பாவித் தமிழர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சி, பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கற்பழிக்கப்படும் காட்சி ஆகியவை வெளியிடப்பட்டன. இதையடுத்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுப்பெற்றன. இந்த நிலையில் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். முதல் தீர்மானமாக சட்டப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றன. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மத்திய அரசிடமும் முதல்வர் இதனை வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போதும் இலங்கை விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்களது சொந்த பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்ட ஹிலாரி கிளிண்டன், தமிழர்களுக்கு சம உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டியில் கூறினார். இலங்கை போர்க் குற்றக் காட்சிகள் அமெரிக்க எம்.பி.க்கள் மத்தியிலும் ஒளிபரப்பப்பட்டு அதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் கண்ணீர் வடித்தனர். போர்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசுமீது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இந்த சூழ்நிலையில் இலங்கை அரசு மீது பொருளாதார தடையும் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரங்களுக்கான எம்.பி.க்கள் குழு இந்த தீர்மானத்தை கொண்டுவந்தது. அது குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு அமெரிக்கா அளித்துவரும் மனிதநேய உதவிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும். இதன் மூலம் ராஜபக்சே அரசுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.