முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசா - கனிமொழியை சிறைக்கு அனுப்பியது காங்கிரஸ்தான்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,ஆக.11 - ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவையும், கனிமொழியையும் சிறைக்கு அனுப்பியது காங்கிரஸ்தான் என்று அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ்ஜெய்ஸ்வால் தெரிவித்தார். கான்பூரில் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ்ஜெய்ஸ்வால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பெருமளவு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி புகார் தெரிவித்திருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்த பிறகுதான் ஊழல் குறித்து விசாரணை செய்ய முடியும் என தெரிவித்தார். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிக்காது என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவையும், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியையும் சிறைக்கு அனுப்பியது காங்கிரஸ் கட்சிதான் என்று தெளிவுபட கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்