முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

பாலியா, ஆக. 23 - உத்தர பிரதேசத்தில் டிராக்டர் டிராலி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பரிதாபமாக பலியானார்கள். உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள உஸ்மான்பூர் என்ற கிராமத்திலிருந்து அமாவா என்ற இடத்தில் உள்ள சீதாமாதா கோவிலுக்கு பக்தர்கள் பலர் ஒரு டிராக்டர் டிராலியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மாலிப்பூர் என்ற இடத்தில் அந்த டிராக்டர் டிராலி தலைகுப்புற கவிழ்ந்து சாலையோரம் இருந்த ஒரு குளத்தில் விழுந்து மூழ்கியது. இதில் 45 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானர்கள். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான் என்று போலீசார் தெரிவித்தனர்.

இநத டிராக்டர் டிராலியில் 60 பேர் பயணம் செய்ததாகவும் இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பலியானவர்களில் 43 பேரின் சடலங்கள் மட்டுமே இது வரை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்றவர்களின் சடலங்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர் என்று சிறப்பு போலீஸ் டி.ஜி.பி. பிரிஜ் லால் தெரிவித்தார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்