முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம் லீலாவில் கூலிப்படைகள் - போலீசார் மோதல்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.27- அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தில் கூலிப்படைகள் புகுந்து போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு நடந்துள்ளது.  ராம்லீலா மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பு கூலிப்படைகள் பலர் வந்து தேசிய கொடியுடன் வந்து நின்றனர்.  பின்னர் ராம் லீலா மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கும்படி அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் மற்றும் மத்திய படையினர்களிடம் கேட்டனர். மேலும் அவர்கள் வந்தே மாதரம்...வந்தே மாதரம் என்று முழங்கினர். ஆனால் மைதானத்திற்குள் அவர்கள் நுழைய போலீசாரும் மத்திய படையினரும் அனுமதி மறுத்துவிட்டனர். அவர்களை போலீசாரும் மத்திய பாதுகாப்பு படையினரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக பிடித்து தள்ளி அனுப்பினர். அப்போது ஏற்பட்ட மோதிலில் மத்தியப்படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். ராம் லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு இடையூறு செய்வதற்காக மைதானத்திற்கு அருகில் இருப்பவர்கள் ரகளையில் ஈடுபட இங்கு வந்தனர் என்று ஹசாரேயின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதேமாதிரி இந்தியா கேட் அருகே சிலர், விஷமத்தனத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூ றுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்