முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீண்டும் கைது

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 21 - நிலஅபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு:- வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் நில அபகரிப்பு புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

நொளம்பூர் அண்ணாமலை அவென்யூவில் 100 கோடிரூபாய் மதிப்பிலான சுமார் 20 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  தொடர்ந்து பல்வேறு புகார் கள் கூறப்பட்டதை அடுத்து ரங்கநாதன் குண்டர் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்நிலையில் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் பெர்னாண்டஸ் என்பவர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.  அதில், தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அத்துமீறி புகுந்து ரங்கநாதனும், அவரது ஆட்களும் ரோடு போட்டதாகவும் இதனை தட்டிக்கேட்ட என்னைகொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறி இருந்தார்.

 

இது குறித்து ராஜமங்கலம் போலீசார் 448 ஐபிசி (அத்து மீறி நுழைதல்) 506(2) ஐபிசி (கொலை மிரட்டல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக வேலூர் சிறையில் இருந்து இன்று பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.  கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்