முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இப்ராஹிம் சீரியஸ்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத். நவ.11 - மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம் இருதய நோய் காரணமாக சீரியசான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 1993 ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு ஓடிவிட்டான். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக தாவூத் இப்ராஹிம் அறிவிக்கப்பட்டுள்ளான். 

அவனை இந்தியாவுக்கு கொண்டு வர சி.பி. ஐ. அதிகாரிகள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவரை பலன் தரவில்லை. இந்த நிலையில் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாவூத் இப்ராஹிமுக்கு ஏற்கநவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது மீண்டும் இருதய நோய் காரணமாக இப்ராஹிம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது நிலை சீரியசாக இருப்பதாகவும் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இறந்துவிட்டால் தனது உடலை மும்பையில் அடக்கம் செய்யுமாறு இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.இப்ராஹிமுக்கு தற்போது வயது 56 என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்