முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் பகுதியில் குண்டுவெடிப்பு 58பேர் உயிரிழந்தனர்

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

காபூல், டிச.- 8 - ஆப்கானில் உள்ள 2 மசூதிகளில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 58 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர். தலைநகர் காபூலின் மையப்பகுதியில் அமைந்துள்ள மசூதியில் பண்டிகையை முன்னிட்டு சியா பிரிவு முஸ்லிம்கள் கூடியிருந்தனர். அப்போது மனித வெடிகுண்டு வெடித்ததில் குழந்தைகள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு மசூதியில் குண்டுவெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இங்கு சைக்கிள் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆப்கனில் தலிபான் ஆட்சிக்காலத்தின் போது சியா பிரிவு முஸ்லிம்கள் மொஹரம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2001 ம் ஆண்டில் மேற்கத்திய உதவியுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டபின் இந்த தடை நீக்கப்பட்டது. தலிபான்கள் ஆண்டபோது சிறுபான்மையினராக இருந்த சியா பிரிவினர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலிபான்கள் நீக்கப்பட்டதிலிருந்து இன ரீதியான தாக்குதல்கள் குறைந்துள்ளது. ஜெர்மனியில் ஆப்கான் தொடர்பான சர்வதேச கூட்டம் நடத்தப்பட்ட வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தை தலிபான்களும் பாகிஸ்தானும் புறக்கணித்துவிட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்