எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. டிச.18.- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரும் வழக்கில் நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜராகி சுப்பிரமணியம் சாமி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போது ஆ.ராசா திகார் சிறையில் இருந்து வருகிறார்.
இவ்வழக்கில் 12 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகூராவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து இவரும் சிறையில் இருக்கிறார்.
இந்த ஊழல் முறைகேடுகள் ப.சிதம்பர் நிதி அமைச்சராக இருந்த போதுதான் நடந்துள்ளன என்றும் அவருக்கு தெரியாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் அனுமதி ஏற்கனவே அனுமதி அளித்து விட்டது.
இவ்வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் டாக்டர் சுப்பிரமணியம் சாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
2ஜி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவும் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் கூட்டாக சேர்ந்துதான் 2 ஜி ஒதுக்கீட்டிற்கான விலை நிர்ணய முடிவை எடுத்துள்ளனர். எனவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கேட்டுக்கொண்டார்.
2001 ம் ஆண்டு நிலவரப்படி 2008 லும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்போது மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்திருக்கிறார். அவருக்கும் இதில் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஊழலில் ஆ.ராசா மட்டும் குற்றவாளி என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆகவே சிதம்பரத்தையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் தான் தொடுத்த வழக்கில் சுப்பிரமணியம்சாமி தானே சாட்சியமாக தோன்ற சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் ஆ.ராசாவை மட்டும் குற்றவாளியாக கூற முடியாது. சிதம்பரத்தை கலந்தாலோசித்துத்தான் ஆ.ராசா இந்த விலை நிர்ணய முடிவை எடுத்துள்ளார்.
எனவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சாமி தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த ஒரு முடிவின்படி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2011, பிப்ரவரி 24 ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான விலை நிர்ணயம் 2003 ம் ஆண்டு மத்திய அமைச்சரவையின் முடிவின்படிதான் செய்யப்பட்டுள்ளது என்றும் அதன்படி அப்போது மத்திய நிதி அமைச்சகமும் மத்திய தொலை தொடர்பு துறையும்தான் இந்த விலை நிர்ணயத்தை செய்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிக்கையின்படி பார்த்தால் அப்போது நிதி அமைச்சராக இருந்தது சிதம்பரம் அப்போது தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தது ஆ.ராசா. எனவே இந்த 2008 ம் ஆண்டு நடந்த 2 ஜி ஒதுக்கீடுகள் சிதம்பரத்திற்கும் தெரியும் என்று சாமி கூறினார்.
சாமியின் சாட்சியங்களை நீதிபதி சைனி பதிவு செய்து கொண்டார். பிறகு இந்த வழக்கு விசாரணையை வருகிற 7 ம் தேதிக்கு நீதிபதி சைனி ஒத்திவைத்தார். அன்றைய தினம் மீண்டும் சுப்பிரமணியம் சாமியே சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.


