எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. டிச.18.- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரும் வழக்கில் நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜராகி சுப்பிரமணியம் சாமி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போது ஆ.ராசா திகார் சிறையில் இருந்து வருகிறார்.
இவ்வழக்கில் 12 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகூராவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து இவரும் சிறையில் இருக்கிறார்.
இந்த ஊழல் முறைகேடுகள் ப.சிதம்பர் நிதி அமைச்சராக இருந்த போதுதான் நடந்துள்ளன என்றும் அவருக்கு தெரியாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் அனுமதி ஏற்கனவே அனுமதி அளித்து விட்டது.
இவ்வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் டாக்டர் சுப்பிரமணியம் சாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
2ஜி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவும் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் கூட்டாக சேர்ந்துதான் 2 ஜி ஒதுக்கீட்டிற்கான விலை நிர்ணய முடிவை எடுத்துள்ளனர். எனவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கேட்டுக்கொண்டார்.
2001 ம் ஆண்டு நிலவரப்படி 2008 லும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்போது மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்திருக்கிறார். அவருக்கும் இதில் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஊழலில் ஆ.ராசா மட்டும் குற்றவாளி என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆகவே சிதம்பரத்தையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் தான் தொடுத்த வழக்கில் சுப்பிரமணியம்சாமி தானே சாட்சியமாக தோன்ற சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் ஆ.ராசாவை மட்டும் குற்றவாளியாக கூற முடியாது. சிதம்பரத்தை கலந்தாலோசித்துத்தான் ஆ.ராசா இந்த விலை நிர்ணய முடிவை எடுத்துள்ளார்.
எனவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சாமி தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த ஒரு முடிவின்படி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2011, பிப்ரவரி 24 ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான விலை நிர்ணயம் 2003 ம் ஆண்டு மத்திய அமைச்சரவையின் முடிவின்படிதான் செய்யப்பட்டுள்ளது என்றும் அதன்படி அப்போது மத்திய நிதி அமைச்சகமும் மத்திய தொலை தொடர்பு துறையும்தான் இந்த விலை நிர்ணயத்தை செய்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிக்கையின்படி பார்த்தால் அப்போது நிதி அமைச்சராக இருந்தது சிதம்பரம் அப்போது தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தது ஆ.ராசா. எனவே இந்த 2008 ம் ஆண்டு நடந்த 2 ஜி ஒதுக்கீடுகள் சிதம்பரத்திற்கும் தெரியும் என்று சாமி கூறினார்.
சாமியின் சாட்சியங்களை நீதிபதி சைனி பதிவு செய்து கொண்டார். பிறகு இந்த வழக்கு விசாரணையை வருகிற 7 ம் தேதிக்கு நீதிபதி சைனி ஒத்திவைத்தார். அன்றைய தினம் மீண்டும் சுப்பிரமணியம் சாமியே சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


