முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா மரணம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், டிச. 27 - கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பா, நேற்று காலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். இவரது மறைவு குறித்து கேள்விப்பட்டதும் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா விரைந்து சென்று மறைந்த தலைவருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வர் சதானந்த கவுடா பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள பங்காரப்பாவின் சொந்த கிராமமான கபத்தூரில் அவரது இறுதி சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் பங்காரப்பாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்பதற்கு வசதியாக ஷிமோகா மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாகவும் முதல்வர் சதானந்தா கவுடா தெரிவித்தார். 

மேலும் கர்நாடக மாநிலத்திற்கு பங்காரப்பா ஆற்றிய சேவைகளையும் முதல்வர் நினைவுகூர்ந்தார். மக்களின் நலனுக்காக பங்காரப்பா பாடுபட்டதையும் முதல்வர் சுட்டிக் காட்டினார். மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கர்நாடகத்தில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும் முதல்வர் சதானந்தா கவுடா தெரிவித்தார். பங்காரப்பா மறைவுக்கு கர்நாடக மாநில தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்