எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.6 - பொங்கல் திருநாள் என்றால் கரும்பும் நினைவுக்கு வரும். அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இனிப்பு செய்தியாக, போக்குவரத்து செலவு உட்பட ஆதாரவிலையை ரூ.2100 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேளாண் துறையில் நிலவும் தேக்க நிலையை நீnullக்கும் வகையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்குவதிலும், விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை அதிகரிப்பதிலும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், வேளாண் நிலப்பரப்பினை அதிகரிப்பதிலும், உற்பத்தித் திறனை உயர்த்துவதிலும் பல ஆக்கப்nullர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், உணவு உற்பத்தியை பெருக்கும் வகையில், சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக மேட்டூர் அணையை ஜூன் 6ஆம் தேதி திறக்க உத்தரவிட்டேன். இது மட்டுமல்லாமல், திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தின் மூலம் கூடுதலாக 60,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், துல்லிய பண்ணையம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைபிடித்தல், துல்லிய பண்ணையம் முறைகளில் காய்கறிகளை பயிரிடுதல், தோட்டக்கலை பயிர்களுக்கான அடர் நடவு முறை என பல புதிய முறைகளை நடப்பாண்டில் எனது தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்க நான் உத்தரவிட்டேன். இதே போன்று, கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், நீnullடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம் என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டு, இதற்கென 12 கோடியே 93 லட்சம் ரூபாயை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன். இந்தப் புதிய திட்டத்தின் மூலம் குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி, சரியான அளவு ஊட்டச் சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.
மேலும், பயிர் செய்வதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் மானியமாக 20 லட்சம் ரூபாய் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம், குறைந்த நிலப் பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி கிடைக்க வழிவகை ஏற்படும்.
வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த ஆண்டு 57.92 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த அரிசி உற்பத்தி நடப்பாண்டில் 80 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 76.6 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த மொத்த உணவு தானிய உற்பத்தி, நடப்பாண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பைப் பொறுத்த வரையில், கடந்த ஆண்டு 3.1 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கரும்பு நடப்பாண்டில் 3.5 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு 342.5 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி நடப்பாண்டில் 400 லட்சம் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மனதில் கொண்டும், முதற்கட்டமாக இந்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலையை, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட 2,100 ஆக உயர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே போன்று, கரும்பு விவசாயிகள் கூடுதல் உற்பத்தி செய்து பொருளாதார பயனடையவும், சர்க்கரை ஆலைகள் போதிய வருவாய் ஈட்டி அதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு அதிக விலை கொடுப்பதற்கு ஏதுவாகவும், எத்தனால் உற்பத்தியை துவங்க எனது தலைமையிலான தமிழக அரசு 2002 ஆம் ஆண்டு கொள்கை அளவில் முடிவு எடுத்தது.
இதன் அடிப்படையில், ஆறு தனியார் எரிசாராய வடிப்பாலைகளும், இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அமைந்துள்ள எரிசாராய வடிப்பாலைகளும் எத்தனால் உற்பத்தியை தொடங்கின. இதன் மூலம், அவை 185 லட்சம் லிட்டர் எத்தனால் தயாரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தன. எனினும், 2006 ஆம் ஆண்டு இறுதியில், எத்தனால் உற்பத்திக்கான அனுமதியை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. இதனால், எத்தனால் ஆலைகளை அமைத்த சர்க்கரை ஆலைகள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளன.
எத்தனால் உற்பத்தியினால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் கரும்பு விலையை வழங்குவது சர்க்கரை ஆலைகளுக்கு எளிதாக இருக்கும். எனவே தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தியை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், கரும்பு விவசாயிகள் கூடுதல் விலை பெறவும், சர்க்கரை ஆலைகள் கூடுதல் வருவாய் ஈட்டவும் வழி வகை ஏற்படும். என்னுடைய இந்த இனிய நடவடிக்கைகளின் மூலம் இனிக்கும் கரும்பைத் தரும் விவசாயிகள் இன்புறுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.