எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.24 - தமிழக முதல்வர் ஜெயலலிதா புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, மருத்துவகாப்பீடு திட்டத்தை கோவை மாவட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தாமோதரன் ஆகியோர் அறிமுகபடுத்தி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். இது குறித்தவிபரம் வருமாறு: கோவையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் பணியை வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரனும், வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தொடங்கி வைத்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரனும், வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை வழங்கி இப்பணியை தொடங்கி வைத்தார்கள். கோவை மாநகர மேயர் செ.ம.வேலுச்சாமி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.துரைசாமி (எ) சேலஞ்சர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் பேசியதாவது:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற வகையில் தமிழகத்தில் 1.34 கோடி குடும்பங்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். கோவை மாவட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் பணி இன்று (நேற்று) தொடங்கப்படுகிறது. வருட வருமானம் ரூ.72000-க்குள் உள்ளவர்களுக்கு திட்டத்தின் மூலம் மருத்துவமனைகளில் 1116 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். கோவையில் 14 மருத்துவமனைகள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏழை எளிய மக்களின் சிரமத்தை போக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நோய்களை கனிவுடன் கேட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும். இத்திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள தொலைபேசி எண்ணை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடையாள அட்டை எப்போது வழங்கப்படும் என்ற விபரத்தினை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று பேசினார்.
இவ்விழாவில் வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயரத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை எளிய மக்களின் நோய்களை தீர்க்க கூடிய வகையில் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் 1116 வகையான நோய்களுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டத்தில் குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருவாய் ரூ.72000க்கு கீழ் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் சிறப்பான திட்டமாகும். இதுபோன்ற சிறப்பான திட்டங்களை கொண்டுவந்த ஜெயலலிதாவுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
இவ்விழாவில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.முத்துக்கருப்பண்ணச்சாமி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) முஸ்தபா கமால் பாட்சா, தனி துணை ஆட்சியர் (சிறப்பு அமலாக்கத்திட்டங்கள்) குணசேகரன், மண்டல குழு தலைவர் ஆதிநாராயணன், இணை இயக்குநர் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் சுகுமாரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், யுனைடெட் இண்டியா இன்சூரன்ஸ் மண்டல மேலாளர் பரமசிவம், முதுநிலை மண்டல மேலாளர் அசோக்குமார், விரிவான காப்பீட்டுத் திட்ட கோவை மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.கிர்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.