LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.24 - தமிழக முதல்வர் ஜெயலலிதா புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, மருத்துவகாப்பீடு திட்டத்தை கோவை மாவட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தாமோதரன் ஆகியோர் அறிமுகபடுத்தி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். இது குறித்தவிபரம் வருமாறு: கோவையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் பணியை வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரனும், வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தொடங்கி வைத்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரனும், வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை வழங்கி இப்பணியை தொடங்கி வைத்தார்கள். கோவை மாநகர மேயர் செ.ம.வேலுச்சாமி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.துரைசாமி (எ) சேலஞ்சர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் பேசியதாவது:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற வகையில் தமிழகத்தில் 1.34 கோடி குடும்பங்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். கோவை மாவட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் பணி இன்று (நேற்று) தொடங்கப்படுகிறது. வருட வருமானம் ரூ.72000-க்குள் உள்ளவர்களுக்கு திட்டத்தின் மூலம் மருத்துவமனைகளில் 1116 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். கோவையில் 14 மருத்துவமனைகள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏழை எளிய மக்களின் சிரமத்தை போக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நோய்களை கனிவுடன் கேட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும். இத்திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள தொலைபேசி எண்ணை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடையாள அட்டை எப்போது வழங்கப்படும் என்ற விபரத்தினை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று பேசினார்.
இவ்விழாவில் வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயரத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை எளிய மக்களின் நோய்களை தீர்க்க கூடிய வகையில் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் 1116 வகையான நோய்களுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டத்தில் குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருவாய் ரூ.72000க்கு கீழ் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் சிறப்பான திட்டமாகும். இதுபோன்ற சிறப்பான திட்டங்களை கொண்டுவந்த ஜெயலலிதாவுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
இவ்விழாவில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.முத்துக்கருப்பண்ணச்சாமி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) முஸ்தபா கமால் பாட்சா, தனி துணை ஆட்சியர் (சிறப்பு அமலாக்கத்திட்டங்கள்) குணசேகரன், மண்டல குழு தலைவர் ஆதிநாராயணன், இணை இயக்குநர் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் சுகுமாரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், யுனைடெட் இண்டியா இன்சூரன்ஸ் மண்டல மேலாளர் பரமசிவம், முதுநிலை மண்டல மேலாளர் அசோக்குமார், விரிவான காப்பீட்டுத் திட்ட கோவை மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.கிர்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி ரசம்![]() 1 day 23 hours ago |
தக்காளி ரசம்![]() 2 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 4 days 23 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 08-08-2022.
08 Aug 2022 -
முல்லைப்பெரியாறு அணை குறித்து அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் : கேரள அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
07 Aug 2022மதுரை : மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோர் சார்பில், தமிழக அரசு விடுத்துள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப
-
அமைச்சர்கள் பழனிவேல்தியாகராஜன், மூர்த்தி இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள்? - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி
07 Aug 2022மதுரை : தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பிஉள்ளார்.
-
காமன்வெல்த் குத்துச்சண்டை : தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் அமித் பங்கால்
07 Aug 2022பர்மிங்ஹாம் : 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
-
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் உ.பி. முதல்வர் யோகி சந்திப்பு
07 Aug 2022புதுடெல்லி : உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார்.
-
காமன்வெல்த் ஈட்டி எறிதல் : இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்று சாதனை
07 Aug 2022பர்மிங்ஹாம் : பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
-
4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா : ஆட்டநாயகன் ஆவேஷ் கான்
07 Aug 2022புதுடெல்லி : வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி 3-1 என டி20 தொடரை வென்றது.
-
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா
07 Aug 2022பர்மிங்ஹாம் : இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது.
-
மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ பட்டம் வென்றார் ஆர்யா
07 Aug 2022வாஷிங்டன் : 2022-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ அழகி பட்டத்தை இந்திய அமெரிக்க இளம்பெண்ணான ஆர்யா வால்வேகர் (18) கைப்பற்றி அசத்தினார்.
-
இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரணவ் வெங்கடேஷ் : நாட்டிற்கு பெருமை சேர்த்த 16 வயது தமிழக வீரர்
07 Aug 2022சென்னை : செஸ் விளையாட்டில் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்.
-
புதிதாக 1,057 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை தகவல்
07 Aug 2022சென்னை : தமிழகத்தில் நேற்று ஆண்கள் 637, பெண்கள் 420 என மொத்தம் 1,057 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
-
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு
07 Aug 2022சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளையுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவடைகிறது.
-
காமன்வெல்த் போட்டியில் : இந்திய பாக்ஸர்கள் அமித் பங்கல், நீத்து தங்கம் வென்றனர் : வெள்ளியை உறுதி செய்த பி.வி.சிந்து
07 Aug 2022பர்மிங்ஹாம் : காமன்வெல்த் பாக்ஸிங்கில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது.
-
மன்னிப்பு வேண்டாம்; கொண்டாடப்பட நேரம் இது வெண்கலம் வென்றதற்காக அழுத வீராங்கனைக்கு பிரதமர் ஆறுதல்
07 Aug 2022பர்மிங்ஹாம் : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனை பூஜா கெலாட்க்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற
-
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்த 3 மாதத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும்: கெஜ்ரிவால்
07 Aug 2022அகமதாபாத் : குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரமும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணை
-
காமன்வெல்த் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிது கங்காஸ்..!
07 Aug 2022பர்மிங்ஹாம் : காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.
-
மின் இணைப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் ரத்தானால் கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவு
07 Aug 2022சென்னை : மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் கட்டண
-
காமன்வெல்த் ஹாக்கியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய மகளிர் அணி
07 Aug 2022பர்மிங்ஹாம் : காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், வெண்கல பதக்கத்திற்கான இந்தியா - நியூசிலாந்து இடையேயான மகளிர் ஹாக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந
-
சதுரங்க பலகையிலும் போர் பாலஸ்தீன அணி உருக்கம்
07 Aug 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயதான சிறுமி, ராண்டா சேடர் பங்கேற்று விளையாடி வருகிறார்.
-
காமன்வெல்த் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டம்: இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்று சாதனை
07 Aug 2022பர்மிங்ஹாம் : 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
-
செஞ்சி பட இசை வெளியீடு
08 Aug 2022அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இயக்கி, நடித்து தயாரித்துள்ள படம் செஞ்சி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
ஆகஸ்ட் 26 ல் வெளியாகும் நெடுநீர்
08 Aug 2022கவின் கிரியேட்டர்ஸ் சார்பில் வி.எஸ்..பாளையம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் கு.கி.பத்மநாபன் இயக்கியுள்ள படம் நெடுநீர்.
-
லாஸ்ட் 6 அவர்ஸ் விமர்சனம்
08 Aug 2022பரத் நடிப்பில் சுனிஷ் குமார் இயக்கத்தில் இப்போது வெளியாகி உள்ள திரைப்படம் லாஸ்ட் 6 ஹவர்ஸ்.
-
விக்டிம் விமர்சனம்
08 Aug 2022பா.ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, ராஜேஷ் ஆகிய நான்கு இயக்குனர்களின் ஆந்தாலஜி தொகுப்பு தான் இந்த விக்டிம். சோனி ஓடிடி தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது.
-
உக்ரைன் துறைமுகங்களில் இருந்து மேலும் 4 தானிய கப்பல் லெபனானுக்கு செல்கிறது
08 Aug 2022கீவ் : ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்தது.